நல்லிணக்கம், அமைதி மேம்படட்டும்! பிரதமர், குடியரசுத் தலைவர் பக்ரீத் வாழ்த்து..!
நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலைகள் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இன்று நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.
பக்ரீத் பண்டிகை அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பை ஏற்படுத்த விரும்புவதாக பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான அவரது வாழ்த்துச் செய்தியில், ஈத் உல்-அதாவுக்கு வாழ்த்துக்கள். இந்த .சந்தர்ப்பம் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும், நமது சமூகத்தில் அமைதியின் கட்டமைப்பை வலுப்படுத்தட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பு கிடைக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்..! பிரதமர் மோடி இன்று திறந்து வைப்பு..!
இதேபோல் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்த தருணத்தில் அனைவரும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற உறுதிமொழி எடுப்போம் எனக் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஈத்-உஸ்-ஜுஹா பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக எனது முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தியாகம், நம்பிக்கை மற்றும் பல உன்னத இலட்சியங்களின் முக்கியத்துவத்தை இந்த விழா விளக்குகிறது. வாருங்கள், இந்த மங்களகரமான சந்தர்ப்பத்தில், நாம் அனைவரும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற உறுதிமொழி எடுப்போம். இவ்வாறு திரௌபதி முர்மு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தேச முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பை செய்துள்ள தெலங்கானா..! மாநில தினத்தை ஒட்டி பிரதமர் வாழ்த்து..!