×
 

தேர்தல் ஆணையம் கெடுபிடி..! வளைகுடா நாடுகளில் வேலை இழந்த மக்களுக்கு துயரம்.! MP சு. வெங்கடேசன் கண்டனம்..!

தேர்தல் ஆணையத்தின் கெடுப்பிடியால் முக்கிய திட்டங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதாக வரும் தகவல்கள் வருத்தம் கொடுப்பதாக mp சு . வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

வளைகுடா நாடுகளிலிருந்து குறிப்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், கத்தார், ஓமன், பஹ்ரைன் போன்றவை வேலையிழந்து தமிழ்நாடு திரும்பியவர்களுக்கு மாநில அரசு சில முக்கியமான உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் மிக முக்கியமானவை NEEDS-SIM மற்றும் MEGP ஆகியவை. இத்திட்டங்கள் கொரோனா தொற்றுநோய் காரணமாக வெளிநாடுகளிலிருந்து திரும்பிய தமிழர்களுக்கு சுயவேலைவாய்ப்பு உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டவை.

இவை தொழில் தொடங்க உதவும் கடன், மானியம் மற்றும் பிற சலுகைகளை வழங்குகின்றன. NEEDS-SIM திட்டம் தமிழ்நாடு அரசின் தொழில்துறைத் துறையால் செயல்படுத்தப்படும் NEEDS திட்டத்தின் சிறப்பு விரிவாக்கமாகும். 2021ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பியோருக்கு உதவுவதற்காக இது அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் வெளிநாடுகளிலிருந்து 2020 ஜனவரி 1 முதல் திரும்பிய தமிழர்கள் குறிப்பாக வளைகுடா நாடுகளிலிருந்து வேலை இழந்தோர் சுயதொழில் தொடங்க ஊக்குவிக்கப்படுகின்றனர். இதில் சுமார் 3.6 லட்சம் பேர் பயனடைய வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

 MEGP திட்டம் Non-Resident Tamils நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டமாகும். இதுவும் கொரோனா காரணமாக வேலை இழந்து 2020 ஜனவரி 1 முதல் தமிழ்நாடு திரும்பிய தமிழர்களுக்காகவே உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சிறு தொழில்கள் தொடங்க கடன் வசதியுடன் மானியம் வழங்கப்படுகிறது. திட்ட செலவில் 25% மானியம் அதிகபட்சம் ரூ.2.5 லட்சம் வரை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் உற்பத்தி, வர்த்தகம், சேவை துறைகளில் தொழில் தொடங்கலாம். உற்பத்திக்கு அதிகபட்ச திட்ட செலவு ரூ.15 லட்சம், வர்த்தகம் மற்றும் சேவைக்கு ரூ.5 லட்சம் வரை அனுமதிக்கப்படுகிறது. 

இதையும் படிங்க: அரசியல் நாகரிகமோ, அறமோ அதிமுகவுக்கு இருந்ததே இல்ல... சி.வி. சண்முகத்தை வெளுத்த கனிமொழி..!!

இந்த நிலையில், வளைகுடா நாடுகளிலிருந்து வேலையிழந்து தாயகம் திரும்புவோருக்கான உதவித் திட்டங்களான NEEDS-SIM மற்றும் MEGP திட்டங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் பொதுவான அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் நிறுத்தப்படுவதாக வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அவசர உதவிக்கு நிகரான இது போன்ற திட்டங்கள் எவ்வித தாமதமும் இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தினம் ஒரு நிர்பயா சம்பவம்... அதிமுக இன்பதுரை பார்லிமென்டில் ஆவேசம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share