பிடிபட்டான் திருடன்! எம்.பி சுதாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை தட்டி தூக்கிய டெல்லி போலீஸ்..!
மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுதா ராமகிருஷ்ணன். இவர் ஒரு முக்கியமான அரசியல் பிரமுகராகவும், வழக்கறிஞராகவும் திகழ்கிறார்.
அவரது அரசியல் வாழ்க்கை பல்வேறு சவால்களையும், சாதனைகளையும் கொண்டதாக உள்ளது. மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுதா, தனது தனித்துவமான பிரச்சார பாணி மற்றும் சமூக ஈடுபாடு மூலம் கவனம் பெற்றவர்.
2024 ஆம் ஆண்டு மயிலாடுதுறை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் சுதா ராமகிருஷ்ணன் அதிமுக, பாமக, மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகப் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில், அவர் 5.18 லட்சம் வாக்குகளைப் பெற்று, அதிமுக வேட்பாளர் பாபுவை 2.71 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இதையும் படிங்க: ஒரு எம்.பிக்கே பாதுகாப்பு இல்லை.. மற்ற பெண்களின் நிலைமை எப்படி இருக்கும்.. எம்.பி சுதா வேதனை..!!
நாடாளுமன்றத்தில், சுதா தனது கருத்துகளைத் துணிச்சலாக முன்வைப்பவராக அறியப்படுகிறார். இந்த நிலையில் டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் எம்பி சுதா டெல்லி சென்றுள்ளார்.
இதனிடையே, டெல்லியில் இன்று நடைப்பயிற்சி சென்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதாவிடம் நான்கரை சவரன் செயின் பறிப்பு சம்பவம் நிகழ்ந்தது. சாணக்கியபுரி பகுதியில் எம் பி சுதா நடைப்பயிற்சி மேற்கொண்டு உள்ளதாக தெரிகிறது.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் எம் பி சுதாவின் கழுத்தில் இருந்த நான்கரை சவரன் செயினை பறித்துச் சென்றனர். இதனால் கழுத்தில் காயமடைந்த நிலையில் சுதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்த நிலை என்றால் சாதாரண பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்று எம்பி சுதா பேசி இருந்தார். வேகமாக இழுக்கப்பட்டு இருந்தால், உயிரே போயிருக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் எம்பி சுதாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து, எம்பி சுதாவின் செயின் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: 5,500 கி.மீ-க்கு அந்த பக்கம் இருந்தாலும் தப்ப முடியாது!! அமெரிக்காவுக்கு செக் வைக்கும் புதின்..!