அண்ணாமலை கூறினால் கூடுதல் நிதி... பாஜகவுக்கு செக் வைத்த திமுக அமைச்சர்!
மத்தியில் பாஜக ஆட்சி நடப்பதால் அண்ணாமலை நினைத்தால் தமிழகத்திற்கு கூடுதல் நிதி பெற்றுத் தரலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் மினி பேருந்துகள் சேவையை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் மினி பேருந்து சேவை தொடங்கப்பட்ட நிலையில், சிதம்பரத்தில் மினி பேருந்துகளின் சேவையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று துவக்கி வைத்தார்.
பின்னர் சிதம்பரம் அருகே வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும், குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கும் நிவாரண தொகையை வேளாண்மைத்துறை அமைச்சர எம்ஆர்கே பன்னீர்செல்வம் வழங்கினார்.
இதையும் படிங்க: கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!
பின்னர் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. குக்கிராமங்களில் உள்ளவர்கள் பயன்பாட்டிற்காக மினி பேருந்து திட்டம் கலைஞர் காலத்தில் கொண்டு வரப்பட்டது. கடந்த ஆட்சியாளர்கள் மினி பேருந்து இயக்கத்திற்கு முக்கியத்துவம் தராததால் அந்த வழித்தடங்கள் முற்றிலும் மறைந்துள்ளது.
தற்போது முதல்வர் மினி பேருந்து இயக்கத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார். இதனால் கடலூர் மாவட்டத்தில் தற்பொழுது 65 பேருந்துகள் இன்று முதல் புதிய வழித்தடங்களில் இயங்க உள்ளன.
கடந்த ஆண்டுகளில் மழையில் நனைந்து நெல் முளைத்திருந்தது. அதனை பொதுமக்கள் அறுவடை செய்து இருந்தார்கள். ஆனால் தற்போது முளைப்பதற்கு முன்பே இந்த ஆட்சியில் நெல்மணிகளை கொள்முதல் செய்து வருகிறோம். எனவே அண்ணாமலைக்கு விவசாயத்தைப் பற்றி தெரியுமா? தெரியாதா? என்று தெரியவில்லை.
மத்தியில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அண்ணாமலை கூறினால் கூடுதல் நிதி ஒதுக்க வாய்ப்பு இருக்கும். ஆட்சியில் விவசாய பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டு நான்கு முறை சரியான நேரத்தில் திறக்கப்பட்டுள்ளது. எனவே சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் முப்போக விவசாயம் செய்து வருகின்றனர் என்றார்.
இதையும் படிங்க: டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!