×
 

#BREAKING: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 5 பேர் பலி.. பயணிகள் பதற்றம்..!

மகாராஷ்டிரா மாநிலம் மும்ப்ரா ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் பயணித்த சில பயணிகள் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவின் மும்ப்ரா ரயில் நிலையத்தில் சிஎஸ்எம்டி நோக்கி சென்ற ரயிலில் ஏராளமானோர் பயணித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சில பயணிகள் ரயிலிலிருந்து விழுந்துள்ளனர். அளவுக்கு அதிகமாக ரயிலில் பயணிகள் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே நிர்வாகமும் காவல்துறையும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. இந்த சம்பவத்தால் உள்ளூர் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் ரயிலில் இருந்த தவறி விழுந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: காலையிலேயே பரபரக்கும் பனையூர்... விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணையும் முக்கிய புள்ளி...!

 

இதையும் படிங்க: அதிமுக EX. எம்எல்ஏ குணசேகரன் மறைவு! கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share