×
 

தினம் தினம் பாலியல் வன்கொடுமை... இதுதான் ஆன்மீக அரசியலா? நயினார் சரமாரி கேள்வி!

தினசரி பாலியல் வன்கொடுமை நடப்பது தான் ஆன்மீக அரசியலாக என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை, 1959-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் கோயில்களின் நிர்வாகத்தை மேற்கொள்கிறது. இதன்மூலம், கோயில் சொத்துகளின் மேலாண்மை, திருப்பணிகள், பூசாரி நல வாரியம், மற்றும் இலவச திருமணங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனிடையே, தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி நடைபெறுவதாக தருமபுரம் மற்றும் மயிலம் பொம்மபுரம் ஆதீனங்கள் ஆதரவாகப் பேசியுள்ளன.

மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீ சிவஞானம், இந்து சமய அறநிலையத்துறை சட்டம் கோயில்களை நிர்வகிக்க உறுதுணையாக இருப்பதாகவும், இதன்மூலம் ஆன்மீகப் பணிகள் திறம்பட செயல்படுத்தப்படுவதாகவும் கூறினார். தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி நடப்பதாக ஆதீனங்கள் பேசியது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: எப்படியாவது கூட்டணியை உடச்சிடலாம்னு நினைக்கிறீங்க.. ஆனால்... நயினார் நாகேந்திரன் அதிரடி!!

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தினம்தோறும் பாலியல் வன்கொடுமை நடப்பது தான் ஆன்மிக அரசியலா என்ற கேள்வியை முன் வைத்தார். தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி நடக்கிறது என பேசுகிறார்கள்., காவல் நிலையங்களில் கர்ப்பிணி பெண்ணை துன்புறுத்துவது தான் ஆன்மிக அரசியலாய் என்றும் தமிழகத்தின் நட்சத்திர ஹோட்டல்களில் கொக்கை சப்ளை நடக்கிறதே இதுதான் ஆன்மீக அரசியலா என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், பாலியல் வன்கொடுமை குறித்து பேசுபவர்கள் மீது வழக்கு தொடுப்பது தான் ஆன்மீக அரசியலா என்றும் நயினார் நாகேந்திரன் சரமாரியான கேள்விகளை முன் வைத்தார். கூட்டணி தொடர்பாக தன்னிடம் பல்வேறு கேள்விகளை முன் வைக்கும் அதே நேரம், திருமாவளவன் கூட்டணி தொடர்பாகவும், அதிக சீட் கொடுப்பது தொடர்பாகவும் பேசுகிறாரே என முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி கேட்க முடியுமா என கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: நடிகை மீனாவுக்கு மாநில பொறுப்பு...! நயினார் நாகேந்திரன் பரபரப்பு பிரஸ்மீட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share