பட்டதாரிகள் எதிர்காலத்தோட விளையாடாதீங்க... நியமனத்தை விரைவுபடுத்துங்க..! நயினார் வலியுறுத்தல்..!!
உதவி பேராசிரியர்கள் நியமனங்கள் விரைவுபடுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
4,000 உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை தவெக அரசு விரைவுபடுத்த வேண்டும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர்களுக்கான பணிநியமனத்தை எளிதாக்கும் வகையில், 6 மாதங்களுக்குள் தேர்வு நடைமுறையை முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் மற்றும் வயது வரம்பு தளர்வு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நேற்று உத்தரவிட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். பல ஆண்டுகளாக காலியாக இருந்த உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆசிரியர் தகுதி வாரியம் மூலமாக தகுதித் தேர்வு நடைபெற்றும், இன்றுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போது வெளிவந்துள்ள இந்தத் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என நயினார் கூறினார். முந்தைய திமுக ஆட்சியைப் போல உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் மெத்தனம் காட்ட கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "ரீல்ஸ் மட்டும் போதாது... உண்மையான சீரமைப்பு தேவை...!” நயினார் நாகேந்திரன் கருத்து..!
ஆசிரியராகும் கனவில் இருக்கும் பட்டதாரிகளின் வாழ்வையும், கல்லூரி மாணவர்கள் எதிர்காலத்தையும் சிதைக்காமல், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: அதலபாதாளத்தில் "Law & Order"... ஒரே அராஜகம்..!! தவெக ஆட்சியை வெளுத்த நயினார்..!