×
 

இனி OP வாங்க NO TENSION...! வந்தாச்சு நலம் Ai APP..!! அமைச்சர் அருண் ராஜ் தொடங்கி வைப்பு..!!

நலம் AI APP-ஐ அமைச்சர் அருண்ராஜ் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் இன்று ‘நலம் ஏஐ’ என்ற புதிய ஏஐ அடிப்படையிலான வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை தொடங்கி வைத்தார். இந்த சேவை மக்களுக்கு அரசு மருத்துவமனைகளின் புறநோயாளிகள் (OP) சிகிச்சை முன்பதிவை வீட்டிலிருந்தபடியே எளிதாகச் செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அரசு மருத்துவமனைகளில், குறிப்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைகளில் தினசரி ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் வருகை தருகின்றனர். பதிவு மற்றும் முன்பதிவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் ‘நலம் ஏஐ’ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது உரையாடல் அடிப்படையில் செயல்படும் ஏஐ சாட்பாட் ஆகும். மக்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறே எளிய உரையாடல் மூலம் மருத்துவ முன்பதிவு செய்துகொள்ளலாம். 

இந்த சேவையைப் பயன்படுத்த, பொதுமக்கள் 96192 22999 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ‘HI’ என்று அனுப்பினால் போதும். அதன் பிறகு ஏஐ உதவியுடன் தேவையான தகவல்களைப் பெற்று, முன்பதிவு செய்ய முடியும். முதல்கட்டமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் இதயவியல் துறையில் பைலட் அடிப்படையில் இந்தச் சேவை செயல்படுத்தப்படுகிறது. பின்னர் படிப்படியாக பிற மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "வீட்டிலிருந்தே அப்பாயிண்ட்மென்ட்"..! இனி அரசு மருத்துவமனைகளில் காத்திருப்பு அவசியம் இல்லை..!!

இந்தப் புதிய சேவை தமிழ்நாட்டில் அரசு சுகாதாரத் துறையின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளில் ஒரு முக்கிய அடியாகப் பார்க்கப்படுகிறது. மக்கள் நலன் சார்ந்த பல புதுமையான திட்டங்களை அமைச்சர் அருண்ராஜ் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் நிலையில், ‘நலம் ஏஐ’ சேவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி பலனடைய வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இதையும் படிங்க: “CAPTAIN COOL”..! விசில் பறக்கட்டும்..! தோனிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share