ஸ்டாலின் தொடரட்டும்… சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கட்டும்… நாங்குநேரி விஷயத்தில் தலையிட்ட விஜய்..!!
நாங்குநேரி சம்பவத்தை சுட்டிக்காட்டி விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி அருகேயுள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்த அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று மக்களை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. களக்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு டீக்கடை முன்பு சிலர் வழக்கம்போல் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
திடீரென இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட மர்மக் கும்பல் அங்கு தாக்குதல் நடத்தியது. இவர்கள் அரிவாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை ஏந்தி வந்திருந்தனர். கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படும் இந்தக் கும்பல், டீக்கடை முன் இருந்தவர்களை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இந்தத் தாக்குதலில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே என்றும் நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா எனவும்
இதையும் படிங்க: ஊரான் வீட்டு நெய்யில SWEET செய்யாதீங்க… வெண்கல சிலை விஷயத்தை வெளுத்து வாங்கிய விஜய்..!!
போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா என்றும் பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருவதாக விஜய் தெரிவித்து இருந்தார். இன்று தஞ்சையில் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய விஜய், நாங்குநேரி விஷயத்தை பார்க்கும் போது ஒன்றுதான் நினைவுக்கு வருவதாக கூறினார். ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும்., சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கட்டும் என்று இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி கூறி வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: விவசாய கடன் தள்ளுபடி… லஞ்சமில்லா நெல் கொள்முதல்.. தஞ்சையில் விஜய் மாஸ் வாக்குறுதி..!