நீட் தேர்வு ரத்து! தேர்வுக்கட்டணம் திருப்பி அளிப்பு!! வங்கி விவரங்களை புதுப்பிக்க கூடுதல் அவகாசம் அறிவிப்பு!
நீட் தீர்வுக் கட்டணம் திருப்பி அளிக்கப்பதற்கான நடைமுறையில் வங்கி விவரங்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் ஜூன் 22 ஆம் தேதி வரை நீட்டித்து, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
சென்னை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு செலுத்திய தேர்வுக் கட்டணத்தைத் திருப்பி அளிப்பதற்கான வங்கி விவரங்களைப் புதுப்பிக்கும் கால அவகாசத்தை வரும் ஜூன் 22-ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
கடந்த மே 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக புகார்கள் எழுந்தன. புகார்கள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து என்டிஏ அந்தத் தேர்வை ரத்து செய்தது. மறுதேர்வு வரும் ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மறுதேர்வுக்கு புதிய கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், ஏற்கெனவே செலுத்திய கட்டணம் முழுவதும் திருப்பி அளிக்கப்படும் என்றும் என்டிஏ தெரிவித்திருந்தது.
இதற்காக மாணவர்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை சரியாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. முதலில் மே 22 முதல் 26 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களில் இதுவரை 13 லட்சம் பேரே மட்டுமே வங்கி விவரங்களைப் புதுப்பித்துள்ளனர். எனவே, மீதமுள்ள மாணவர்களின் நலன் கருதி கால அவகாசத்தை ஜூன் 22 வரை நீட்டிக்க என்டிஏ முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவில் பயிற்சி மைய அதிபர் கைது! ஆண்டுக்கு ரூ.100 கோடி வருமானம்! அம்மாடியோவ்!!
சிபிஐ இந்த வினாத்தாள் கசிவு வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பேராசிரியர்கள், பயிற்சி மைய உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரை கைது செய்து விசாரணை செய்து வருகிறது. இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மாணவர்கள் உடனடியாக என்டிஏ இணையதளத்திற்குச் சென்று தங்களது வங்கி விவரங்களை சரிபார்த்து புதுப்பிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சரியான வங்கி கணக்கு விவரங்கள் இல்லாவிட்டால் பணம் திருப்பி அளிக்கப்படுவதில் தாமதம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நீட்டிப்பு பல மாணவர்களுக்கு பெரும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 21 அன்று நடைபெறும் மறுதேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள், கட்டணத் திருப்பி அளிக்கும் நடைமுறையையும் ஒரே நேரத்தில் முடித்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவில் பயிற்சி மைய அதிபர் கைது! ஆண்டுக்கு ரூ.100 கோடி வருமானம்! அம்மாடியோவ்!!