×
 

நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பான மீட்பு மற்றும் காணாமல் போனோர் எண்ணிக்கை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினர் அதிகாரிகளிடம் தொடர்ந்து தகவல்களை கேட்டுவருகின்றனர்.

காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் தாக்கம் தொடர்ந்து வருகிறது. பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400-ஐ கடந்துள்ள நிலையில், 6,000க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

திபெத் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறை சரிவு காரணமாக உருவான பெரும் நீரோட்டம் நேபாளத்தின் ஆற்றுப் பகுதிகளில் மிகப்பெரிய வெள்ளத்தை ஏற்படுத்தியது. இதன் தாக்கத்தால் வீடுகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் சேதமடைந்தன. வெள்ளத்துடன் அடித்து வரப்பட்ட சேறு மற்றும் இடிபாடுகள் பல பகுதிகளை மூடியதால் மீட்புப் பணிகளில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

நேபாள தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் சமீபத்திய தரவின்படி, 1,403 பேர் உயிரிழந்துள்ளனர். 6,150 பேர் காணாமல் போனவர்களின் பட்டியலில் உள்ளனர். இதுவரை 13,742 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களில் வெளிநாட்டினரும் இடம்பெற்றுள்ளனர். மீட்புப் பணியில் நேபாள ராணுவம், போலீஸ் மற்றும் ஆயுதப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நேபாளத்தை புரட்டிப் போட்ட பெருவெள்ளம்! மீண்டும் கட்டமைக்க ரூ.45,400 கோடி தேவை – வெளியான அதிர்ச்சி கணக்கு!!

வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர்ந்து தகவலுக்காக காத்திருக்கின்றனர். பலரது உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படாததால், குடும்பத்தினரின் துயரம் மேலும் அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மீட்கப்படும் உடல்களின் அடையாளம் உறுதி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரிகர்களும் இந்த பேரழிவில் சிக்கியுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பான மீட்பு மற்றும் காணாமல் போனோர் எண்ணிக்கை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினர் அதிகாரிகளிடம் தொடர்ந்து தகவல்களை கேட்டுவருகின்றனர்.

நேபாளத்தின் பல பகுதிகளில் தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், காணாமல் போனவர்களை கண்டறியும் பணியில் சவால்கள் நீடிக்கின்றன. இதனால் மீட்புப் படையினர் இடிபாடுகள் மற்றும் சேற்றுக்குள் தொடர்ந்து தேடுதல் நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நேபாள பேரிடர்: மாயமான 85 தமிழர்களில் 78 பேரின் டிஎன்ஏ நேபாள அரசிடம் ஒப்படைப்பு! நம்பிக்கையுடன் காத்திருக்கும் குடும்பங்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share