×
 

ஒரே ரீசார்ஜ்.. வருஷம் ஃபுல்லா ஜாலி ரைடு... 'பாஸ்டேக்'கில் வருகிறதா புது ரூல்..?

ஆண்டுக்கு ரூபாய் 3000 சந்தா செலுத்தி அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டு முழுவதும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்ற புதிய விதியை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனை தவிா்க்கும் விதமாக டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்த 'பாஸ்டேக்' முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் இதன்மூலம் போக்குவரத்து நெரிசலையும் குறைக்க முடிந்தது. 

அதேநேரத்தில் இந்த முறையால் முழுமையான தீர்வு கிடைத்துவிட்டதா என்றால் இல்லை. பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் இரு மடங்கு சுங்கக் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். கூடுதல் கட்டணத்தை ரொக்கம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மற்றும் UPI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி செலுத்தப்படுகிறது. 

இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கு: சூனா பானா தயாநிதி மாறனே ரொம்ப ஆடாதீங்க.. பொளந்துகட்டிய ஆர்.பி. உதயகுமார்!

இதனிடையே சுங்கசாவடிகளில் இடையூறுகளை தவிர்க்க நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) கடந்த பிப்ரவரி 17 முதல் புதிய டோல் முறைகளை அமல்படுத்தியது. அதன்படி, வாகனங்கள் சுங்கச் சாவடியை அடைவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு பாஸ்டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டிருந்தாலோ, ஹாட் லிஸ்டில் இருந்தாலோ, குறைந்த இருப்பைக் கொண்டிருந்தாலோ சுங்கச் சாவடியில் பணப்பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.

மேலும் ஸ்கேன் செய்யப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு பாஸ்டேக், ப்ளாக்லிஸ்ட் செய்யப்பட்டாலோ அல்லது செயலற்ற நிலையில் இருந்தாலோ பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். பாஸ்டேக் இந்த இரண்டு நிபந்தனைகளையுமே பூர்த்தி செய்யவில்லை என்றால் "எரர் கோட் 176" உடன் பரிவர்த்தனை ரத்து செய்யப்படும். மேலும் அத்தைகைய வாகனத்திற்கு சுங்க கட்டணத்தை விட 2 மடங்கு அபராதம் விதிக்கப்படும்.

இதனை பார்த்த மத்திய அரசு சுங்கக்கட்டணம் செலுத்துவதில் ஜிபிஎஸ் முறையை அமல்படுத்த முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில் அவ்வப்போது பாஸ்ட் டேக் ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக, மொபைல் ரீசார்ஜ் போல் ஆண்டுக்கு ரூபாய் 3000 சந்தா செலுத்தி அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள் மற்றும் மாநில விரைவுச் சாலைகளில் ஆண்டு முழுவதும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்ற புதிய விதியை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: நீலக்கொடி என்ற அங்கீகாரம்.. பளபளப்பாக மாறப்போகுது இந்த 4 'பீச்'கள்..! இனி வேற லெவல் தான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share