நடுங்க வைக்கும் குண்டு வெடிப்பு... NIA வசம் சென்ற வழக்கு... சூடுபிடிக்கும் விசாரணை...!
டெல்லி போலீஸ் வசம் இருந்த கார் குண்டு வெடிப்பு வழக்கு NIA வசம் சென்றது.
டெல்லி காவல்துறை விசாரித்து வந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்துள்ளது. டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் பெறும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் பயங்கரவாத சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டு வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலங்களில், நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சதி செய்த பலர் கைது செய்யப்பட்டு, அவர்களின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. ஹரியானாவில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஹரியானாவில் அதிக அளவு ஆர்.டி.எக்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது.
இருப்பினும், இது நடந்த சில மணி நேரங்களுக்குள் தேசிய தலைநகரில் ஒரு பெரிய வெடிப்பு நிகழ்ந்தது கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தில் ஒரு காரில் வெடிப்பு நிகழ்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். செங்கோட்டையின் கேட் எண் 1 இல் நிறுத்தப்பட்டிருந்த காரில் இந்த மிகப்பெரிய வெடிப்பு நிகழ்ந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. திங்கட்கிழமை மாலை 6.45 மணிக்கு இந்த வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் அருகிலுள்ள 8 கார்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. அருகிலுள்ள கடைகளும் குண்டுவெடிப்பில் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: FRIEND- னா வன்கொடுமை செய்யலாமா? நட்பு எவ்வித உரிமையும் தராது… பாலியல் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் காட்டம்..!
இந்த குண்டு வெடிப்பில் இதுவரை 13 உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், ஏராளமானோரிடம் டெல்லி போலீஸ் விசாரித்து வந்தது. அந்த காரை ஓடிவந்த உமர் என்பவரின் தாய் மற்றும் சகோதரர்களை கைது செய்தனர். தற்போது டெல்லி போலீஸ் வசம் இருந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இதையும் படிங்க: சாதியப் பெயர்கள் நீக்கத்திற்கு கடும் எதிர்ப்பு... உயர் நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவு...!