×
 

இனி தப்பிக்க முடியாது..! நீட் தேர்வு மோசடிகளை முறியடிக்க களமிறங்கும் செயற்கை நுண்ணறிவு!

நீட் (NEET-UG) தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் மோசடிகளைத் தடுக்க, இந்த ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தேசிய தேர்வு முகமை (NTA) முடிவெடுத்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET-UG) தேர்வில் நடைபெறும் ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி வேலைகளை முற்றிலுமாக ஒழிக்க, தேசிய தேர்வு முகமை இந்த ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் முறைகேடு செய்ய நினைக்கும் நபர்கள் இனி தப்பவே முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கவும், தகுதியான மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யவும் தேசிய தேர்வு முகமை பல நவீன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தேர்வு மையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களுடன் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் இணைக்கப்படும். இது மாணவர்களின் அசைவுகள், ஆள்மாறாட்ட முயற்சிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை உடனுக்குடன் கண்டறிந்து அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்யும்.

இதையும் படிங்க: மனிதக் கட்டுப்பாட்டை மீறுகிறதா AI..?? Kill switch அவசியம் வேண்டும்..!! ஒரே போடு போட்ட டிரம்ப்..!!

தேர்வு எழுத வரும் மாணவர்களின் அடையாளத்தை உறுதி செய்ய அதிநவீன பயோமெட்ரிக் மற்றும் முக அடையாளக் கண்டறிதல் (Face Recognition) முறைகள் பயன்படுத்தப்படும். தேர்வின் புனிதத்தைக் காக்கும் வகையில், மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான தண்டனைகளை என்டிஏ அறிவித்துள்ளது.

நிரந்தரத் தடை: தேர்வின் போது பிட் அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல் அல்லது பிற மோசடி வேலைகளில் ஈடுபட்டுப் பிடிபடும் நபர்கள், தேசிய தேர்வு முகமை நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் பங்கேற்பதிலிருந்து நிரந்தரமாகத் தடை செய்யப்படுவார்கள்.

கிரிமினல் நடவடிக்கை: முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டுமின்றி, காவல்துறையின் மூலம் கிரிமினல் வழக்குகளும் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் நடத்தப்படும் மிக முக்கியமான இந்தத் தேர்வில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க என்டிஏ எடுத்துள்ள இந்த முயற்சி கல்வித் துறையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முறையான பயிற்சியும், கடின உழைப்பும் கொண்ட மாணவர்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் ஒரு பாதுகாப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.
 

இதையும் படிங்க: ஜூன் 1க்குள் இதை செய்யுங்கள்... சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை உறுதி... சிபிஐக்கு நீதிமன்றம் சொன்னது என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share