×
 

ஊர்ந்து போய் பதவி வாங்கியவர் இபிஎஸ்... நன்றி இல்ல..! OPS சரமாரி விமர்சனம்..!!

நன்றி மறந்தவர் எடப்பாடி பழனிச்சாமி என ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 2022இல் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் தனியாக அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற அமைப்பை நடத்தி வந்தார். பின்னர் 2026 பிப்ரவரி இறுதியில் திமுகவில் இணைந்தார். இந்த இணைப்பு அதிமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவால் பலமுறை முதலமைச்சராக நியமிக்கப்பட்டவர் என்ற பெருமையைப் பெற்ற ஓபிஎஸ், தற்போது அதிமுகவின் எதிரிக் கட்சியான திமுகவில் இணைந்தது எடப்பாடி தரப்புக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு மாவட்டத்தில்நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஓபிஎஸ்ஐ கடுமையாக சாடினார். "ஜெயலலிதா அவர்கள் நம்பி முதலமைச்சர் பதவி கொடுத்த ஓ. பன்னீர்செல்வம் நன்றியை மறந்து, தீய சக்தியான திமுகவில் இணைந்துவிட்டார்" என்று குறிப்பிட்டார். இதன் மூலம் ஜெயலலிதாவின் அருளையும், அவரால் கிடைத்த உயர் பதவிகளையும் மறந்துவிட்டதாக ஓபிஎஸ்ஐ குற்றம்சாட்டினார்.

மேலும், ஓபிஎஸ் திமுகவின் 'பி டீம்' என்றும், எம்ஜிஆர் அழிக்க நினைத்த கட்சியில் அடைக்கலம் புகுந்துவிட்டார் என்றும் எடப்பாடி தரப்பு தொடர்ந்து விமர்சித்து வருகிறது.ஆனால், இதற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியை ஓ.பன்னீர்செல்வம் சரமாரியாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: நினைச்சாலே நெஞ்சம் பதறுதே... விடிந்ததுமே புயலைக் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி... கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்...!

இபிஎஸ் பெயரை சொல்லகூட எனக்கு விருப்பம் இல்லை என்றும் ஊர்ந்து போய் பதவியை பெற்று அதை கொடுத்தவருக்கே நன்றி இல்லாமல் இன்று அரசியலில் இருப்பவர்தான் எடப்பாடி பழனிசாமி எனவும் தெரிவித்தார். அவரது தலைமையில் சந்தித்த 10 தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை மட்டுமே தழுவியுள்ளது என்றும் நன்றி மறந்தவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே வாக்களிக்க மாட்டார்கள் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: GAS தட்டுப்பாடு பிரச்சனை... அம்மா உணவகங்களில் கவனம் தேவை... EPS வலியுறுத்தல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share