×
 

அதுக்கு இப்போ என்ன அவசியம்.. ராகுல்காந்தி, கார்கே கோரிக்கைக்கு ’No’ சொன்ன மோடி..!

எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி, பார்லிமெண்ட் சிறப்புக் கூட்டத்தை கூட்டி பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்‌ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. 

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

இதனால் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் மக்கள் வசிக்கும் இடங்களிலும் ஏவுகணைகள், ட்ரோன்களை வீசியது. ஆனால், பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை ஏவுகணை பாதுகாப்பு கவச வாகனம் மூலம் இந்தியா முறியடித்தது. 

இதையும் படிங்க: பாக். சொன்னதை விட அதிக இடங்களில் இந்தியா தாக்குதல்..! அதிர வைக்கும் பாகிஸ்தானின் ஆவணம்..!

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்திய ராணுவம் லாகூர், கராச்சி நகரங்களில் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதனால் இரு நாடுகளிடையே தீவிர போர் மூளுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 10ம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த சம்மதம் தெரிவித்ததாக கூறினார். அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் இருதரப்பு சண்டை நிறுத்தத்தை இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியும் உறுதி செய்தார். அன்று மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமலானது. 

ஆப்பரேஷன் சிந்துார் குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடியும்,  அமெரிக்காவின் மத்தியஸ்த நடவடிக்கையால் அணு ஆயுத போர் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், போரை நிறுத்தாவிட்டால் இந்தியா-பாக்., உடனான வர்த்தகத்துக்கு தடை விதிக்கப்படும் என கூறியதை அடுத்து, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், ட்ரம்ப் மத்தியஸ்சம் குறித்தும், போர் நிறுத்தம் குறித்து இந்தியா - பாக்., அறிவிக்கும் முன்னரே ட்ரம்ப் அறிவித்தது குறித்தும் சர்ச்சையானது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் கூட்டி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பாகிஸ்தானில் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கையை உலக நாடுகளுக்கு தெரிவித்து நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக பார்லி. எம்.பி.,க்கள் குழு உலக நாடுகளுக்கு சென்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி விளக்கியது. அதே சமயத்தில், எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி, பார்லிமெண்ட் சிறப்புக் கூட்டத்தை கூட்டி பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் இண்டி கூட்டணியின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஏற்கனவே ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடக்க இருக்கிறது. எனவே தற்போதைய நிலையில், சிறப்புக் கூட்டத்தொடர் என்பது அவசியமற்றது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டாலும், பார்லிமெண்டில் பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும், அடுத்து வரக்கூடிய பார்லிமெண்ட் தொடரில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றி உரிய விளக்கம் அளிப்பார் என்று மத்திய அரசு தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: மம்தா பானர்ஜி அரசுக்கு இருக்கு வேட்டு! மோடி ஆட்சியில இதுக்கெல்லாம் இடமே இல்லை.. அமித்ஷா சரவெடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share