×
 

இந்திய ட்ரோன்களை இதுனாலதான் நாங்க சுடவில்லை... பாக். அமைச்சரின் பகீர் விளக்கம்!!

இந்தியாவின் ட்ரோன்களை சுடாமல் இருந்ததற்கான காரணம் குறித்து பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிஃப் விளக்கம் அளித்துள்ளார்.

காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன.  இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் இதில் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர். இதை அடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்தியா மீது மீண்டும் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: இந்தியா - பாக். பதற்றம்; இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.. டிவி சேனல்களுக்கு அதிரடி உத்தரவு!!

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், இந்திய விமானப் படை பதிலடியை கொடுத்துள்ளது. நேற்று 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது.  பாகிஸ்தான் 50க்கும் மேற்பட்ட டிரோன்களை பயன்படுத்தி இந்தியா மீது தாக்குதல் மேற்கொண்டது. இந்த டிரோன் தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. 50க்கும் மேற்பட்ட டிரோன்கள் அழிக்கப்பட்டன.   இந்த நிலையில்தான், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கொடுத்துள்ள விளக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பேசுகையில், என்னால் அனைத்து விவரங்களையும் கூற முடியாது. ஆனால், நேற்று இந்திய டிரோன்களை நாங்கள் தடுக்காததற்கு காரணம், எங்கள் பாதுகாப்பு நிலைகளை இந்தியாவிற்கு காட்ட விரும்பவில்லை என்பது தான். எங்கள் டிஃபன்ஸை எதிரி பார்த்துவிட்டால் என்ன செய்வது. அதனால் தான் நாங்கள் டிரோனை சுடவில்லை என்றார். ஆனால், கவாஜா ஆசிஃப்பின் விளக்கம் வினோதமாக இருப்பதாக விமர்சனங்க எழுந்து வருகிறது. இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்த அடுத்த நாள் இந்த விளக்கத்தை கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய ராணுவம் உங்களை அவ்வளவு சீக்கிரமா விட்டுவிடாது.. அசீம் முனீருக்கு பீதியை கிளப்பும் வார்னிங்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share