×
 

ஓகே சொன்ன பிரதமர் மோடி.. முதல்வர் ஸ்டாலினை எப்போது சந்திக்கிறார் தெரியுமா? 

பிரதமரை தனியாக சந்திக்க முதல்வர் நேற்று நேரம் கேட்டிருந்த நிலையில், இன்று மாலை இருவரும் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பு நிதியாண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. மாநில முதல்வர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் க்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். இதற்காக நேற்று தனி விமானம் மூலம் டெல்லி சென்ற முதல்வர், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். 

இன்று காலை 11 மணி அளவில் தொடங்கிய நிதி ஆயோக் கூட்டத்தில் தனது அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வை ஸ்டாலின் கேட்பாரா? என்ற எதிர்பார்ப்பை விட, இரண்டு ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து வரும் முதல்வர் ஸ்டாலின், தற்போது எந்த நோக்கத்துக்காக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருப்பது ஏன்? என்ற கேள்வி தான் அதிக கவனம் பெற்று வருகிறது. 

ஏனெனில் டாஸ்மாகில் 1000 கோடி ஊழல், டாஸ்மாக் பாரில் பல நூறு கோடி ஊழல் என திமுக ஆட்சி காலத்தில் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டி வருகிறது. இதனிடையே,  பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றன. 

இதையும் படிங்க: பிரதமர் மோடி தலைமையில் கூடுகிறது நிதி ஆயோக் கூட்டம்.. நிதி பகிர்வு குறித்து விவாதிக்க முதல்வர் ஸ்டாலின் திட்டம்!

இதனிடையே, பிரதமரை தனியாக சந்திக்க முதல்வர் நேற்று நேரம் கேட்டிருந்த நிலையில், இன்று மாலை இருவரும் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 4 மணி அளவில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பயங்கரவாதம், நக்சலிசத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.. பிரதமர் மோடி திட்டவட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share