#BREAKING: சொந்த மண்ணில் கொடூரம்.. ஓடோடிச் சென்று பிரதமர் மோடி ஆய்வு.. அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!
அகமதாபாத்தில் விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் சிக்னலை இழந்த நிலையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில் 230 பேர் பயணிகள், 2 விமானிகள், 10 ஊழியர்கள் பயணித்துள்ளனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.
விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாணி பயணித்த நிலையில் அவரும் இந்த விபத்தில் உயிரிழந்தார். விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டும் எமர்ஜென்சி எக்ஸிட் வழியாக குதித்து உயிர் தப்பிய நிலையில் மீதமிருந்து 241 பேரும் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: நொறுங்கிய விமானம்.. என்னதான் ஆனது? விபத்து தொடர்பாக தொடர்ந்து கேட்டறியும் பிரதமர் மோடி..!
நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா சம்பவ இடத்திற்குச் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டதுடன் விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று அகமதாபாத் சென்றுள்ள பிரதமர் மோடி இந்த கோர விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பிரதமர் மோடி விபத்துக்கான காரணம் என்ன, எப்படி நிகழ்ந்தது, தற்போது உள்ள நிலைமை, உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: #BREAKING: மனதை உலுக்கிய கோர விபத்து.. 169 இந்தியர்கள் பயணம்.. AIR INDIA அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!