×
 

'சோம்நாத் சுயமரியாதை திருவிழா'!! 1,000 ஆண்டு பாரம்பரியம்!! பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

சோம்நாத் கோயிலின் பாரம்பரியம், பெருமையை கவுரவிக்கும் வகையில் அக்கோயிலில் பிரமாண்ட திருவிழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வழிபட்டார்.

குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோயில் இந்தியாவின் மிகப் பழமையான ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றாகும். சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு, 1026-ஆம் ஆண்டு கஜினி முகமது படைகளால் இக்கோயில் தாக்குதலுக்கு உள்ளானது.

கோயிலின் செல்வங்கள் சூறையாடப்பட்டன. அதன் பிறகும் பல முறை இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்ட இந்த கோயில், இன்றும் இந்தியாவின் நம்பிக்கை, தைரியம் மற்றும் கலாச்சார வலிமையின் அடையாளமாக கம்பீரமாக நிற்கிறது.

இந்த பாரம்பரியத்தையும், கோயிலின் சுயமரியாதையையும் கௌரவிக்கும் வகையில் சோம்நாத் சுயமரியாதை திருவிழா (Somnath Swabhiman Parv) ஜனவரி 8 முதல் 11 வரை நடைபெற்று வருகிறது. இது கோயில் மீதான முதல் தாக்குதலின் 1,000-வது ஆண்டு நிறைவையும், 1951-இல் கோயில் மறுபடியும் திறக்கப்பட்டதன் 75-வது ஆண்டையும் கொண்டாடும் முக்கிய நிகழ்வாகும்.

இதையும் படிங்க: பெண் கஞ்சா வியாபாரியுடன் போட்டோ!! இதுக்கு என்ன சொல்லப்போறீங்க! அமைச்சரை வெளுத்த அண்ணாமலை!

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நேற்று (ஜனவரி 10) முதல் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் முதல் நாளில் வெரவல் நகருக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்த பிரதமரை முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் மாநில அரசு பிரதிநிதிகள் உற்சாகமாக வரவேற்றனர். வழிநெடுகிலும் திரளான மக்கள் நின்று பிரதமரை வரவேற்று ஆரவாரம் செய்தனர்.

சோம்நாத் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி, கோயில் வளாகத்தில் நடைபெற்ற ஓம்கார் மந்திர ஜெபம் நிகழ்வில் கலந்து கொண்டார். பின்னர் கோயில் வளாகத்தில் நடந்த பிரமாண்டமான டிரோன் ஷோவை (சுமார் 3,000 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டது) பார்வையிட்டார். 

இந்த ஷோவில் லார்ட் சிவன், சிவலிங்கம், சோம்நாத் கோயிலின் 3D உருவம் உள்ளிட்ட அற்புதமான காட்சிகள் வானத்தில் தோன்றி பார்வையாளர்களை பிரமிக்க வைத்தன. பின்னர் பிரம்மாண்டமான பட்டாசு வெடிகள் காட்சியும் நடைபெற்றது.

இன்று (ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை) காலை சோம்நாத் கோயிலில் நடைபெற்ற சோம்நாத் சுயமரியாதை விழாவில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றார்.

சௌர்ய யாத்திரை (Shaurya Yatra) என்ற பெயரில் நடைபெற்ற சிறப்பு அணிவகுப்பில் (108 குதிரைகளுடன் கூடிய சின்ன ஊர்வலம்) பிரதமர் திறந்த வாகனத்தில் பங்கேற்று, கோயிலை பாதுகாத்து உயிர்த்தியாகம் செய்தவர்களை நினைவு கூர்ந்தார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிரதமரை வரவேற்று மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு குஜராத் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு இந்தியாவின் பழங்கால நம்பிக்கை, தைரியம் மற்றும் கலாச்சார வலிமையை மீண்டும் நினைவூட்டும் முக்கிய தருணமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: ஈரானில் அரசுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்..!! இணைய சேவை முடக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share