"உனக்கு ஆயுசு கெட்டிப்பா".. மரணத்தை வென்றவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!!
குஜராத் விமான விபத்தில் மரணத்தை வென்று உயிர்த்தப்பிய நபரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நொடிகளிலேயே விழுந்து நொறுங்கியது. பெரும் பரபரப்பு ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து மீட்பு பணிகள் துரித கதியில் நடைபெற்றது. ஆனால், 1.25 லட்சம் லிட்டர் எரிபொருட்கள் விமானத்தில் இருந்ததால் யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது.
ஆனால் "உனக்கு ஆயுசு கெட்டிப்பா" என சொல்லும் அளவிற்கு ஒருவர் விமான விபத்திலிருந்து தப்பி உயிர் பிழைத்துள்ளார். விபத்து நிகழ்ந்ததும் எமர்ஜென்சி எக்ஸிட் வழியாக குதித்து உயிர் தப்பிய ரமேஷ் விஷ்வாஷ் என்பவர் விமான புறப்பட்ட 23 நொடிகளிலேயே வெடித்து சிதறியதாக பகிர் தகவலை கூறியிருந்தார். தன் உறவினர் வீட்டிற்கு வந்து லண்டன் சென்றபோது இந்த விபத்தில் சிக்கியதாகவும் அவர் கூறியிருந்தார். இவ்வளவு பெரிய விபத்திலிருந்து உயிர் பிழைத்த நபரால் ஏர் இந்தியா விமானத்தின் 11A இருக்கை பிரபலமானது.
இதையும் படிங்க: லண்டன் போய் போன் பண்ணுப்பா சொன்னேன்... என் மகனே போயிட்டான்! கதறி துடிக்கும் தாய்...
கண், கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் மீட்கப்பட்ட ரமேஷ் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி மரணத்தை வென்று உயிர் பிழைத்த ரமேஷை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க: அதான் அவரே சொல்றாரே! மோடி, அமித்ஷா, ராம்மோகன் பதவி விலகணும்…நியாயம் பேசும் பாஜக மூத்த தலை!