×
 

தமிழ் புத்தாண்டு: முதல் ஆளாக தமிழில் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி... இபிஎஸும் வாழ்த்து சொல்லிட்டாரு...!

தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரைத் திருநாளை முன்னிட்டு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சித்திரை மாதத்தின் தொடக்கத்தை குறிக்கும் தமிழ் புத்தாண்டு இன்று (ஏப்ரல் 14) உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.. அன்றைய தினம் புது ஆடைகளை அணிவது, வாசலில் கோலமிடுவது, கோயிலுக்கு சென்று இறைவனை வழிபடுவது, முக்கனி பாயாசம் போன்ற ருசியான இனிப்புகள் தயார் செய்வது மட்டுமின்றி நெருக்கமான உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்து செய்திகளை பகிர்வது அந்த நாளை மேலும் இனிமையாக்குகிறது.

இந்நாளில் அரசியல் கட்சி தலைவர்கள் சோசியல் மீடியாக்கள் மூலமாக வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பாரத பிரதமர் மோடி தனது சோசியல் மீடியா மூலமாக தமிழ் மக்களுக்கு தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், தனது வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ளார். அதில், "இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும் வெற்றியும் நல்ல ஆரோக்கியமும் நிறைந்திருக்க நான் பிரார்த்திக்கிறேன். சிறப்புமிக்க இந்த இந்த நாள் புதுப்பித்தல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்களின் கொண்டாட்டமாகும். இது தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைப் போற்றும் ஒரு தருணமாகும். அதன் இலக்கியம், இசை, கலை, தத்துவம் பக்தி ஆகியவற்றின் வளமான பாரம்பரியம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.

இதையும் படிங்க: மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி... கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்...!

சிறப்புமிக்க இந்த நாள் நமது சமூகத்தில் ஒற்றுமை உணர்வை மேலும் வளர்க்கட்டும் மகத்தான தமிழ்ப் பண்பாட்டால் உத்வேகம் பெற்று, நாம் வெற்றியின் புதிய சிகரங்களை அடைவதோடு, இயற்கையுடனான நமது பிணைப்பையும் ஆழப்படுத்திக் கொள்வோம்” என பதிவிட்டுள்ளார். 


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய நன்னாளில், உலகெங்கும் வாழுகின்ற அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'தமிழ்ப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

'புதிய சாதனைகள் பலவற்றைப் படைத்து; புதிய வெற்றிகளைப் பெற்று; வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, அமைதியான வாழ்வைப் பெறுவோம்; வளமான தமிழ் நாட்டைப் படைத்திடுவோம்' என, இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.

தமிழ்ப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்!” என பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: ராஜ்யசபா எம்.பி ஆனார் நிதிஷ்குமார்..!! பீகார் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை கொடுத்தவர்..!! பிரதமர் மோடி புகழாரம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share