×
 

தங்கம் வாங்காதீங்க... நாட்டு மக்களுக்கு மோடி சொன்ன முக்கிய செய்தி... பின்னணியில் உள்ள காரணம் என்ன?

பெட்ரோலை சேமியுங்கள், தங்கம் வாங்காதீர்கள் என பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கக்கூடியது மக்கள் மத்தியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை பொதுமக்கள் நிறுத்துமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகொள்விடுத்திருக்கிறார். சர்வதேச கச்சா எண்ணை விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இதுபோன்ற அழைப்பை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விடுத்திருக்கிறார். 

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்கான நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாக, நேற்றிரவு செகந்திராபாத் பரேட் மைதானத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு முக்கியமான செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார். தங்கம் வாங்குவதால் அந்நிய செலவாணி அதிகரிக்கிறது. அதனால் ஓராண்டிற்கு தங்கம் வாங்குவதை பொதுமக்கள் நிறுத்த வேண்டும். அதேபோன்று கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலே தான் வீட்டிலிருந்து பணியாற்றுவது குறித்து அனைவரும் யோசிக்க வேண்டும்.

 அதாவது கொரோனா காலகட்டத்தில் நாம் எப்படி வீட்டிலிருந்து பணியாற்றினோமோ அதுபோன்ற நாம் பணியாற்ற கற்றுக்கொள்ள வேண்டும் உள்ளிட்டவற்றை பொதுமக்களிடம் வேண்டுகோளாக வைத்திருக்கிறார். அதாவது மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றத்தின் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டிருக்கின்றது. தங்கம் விலையும் அதே போன்று உயர்ந்து கொண்டிருக்கின்றது. இது மாதிரியான சூழலில் தான் பிரதமர் மோடி பொதுமக்களிடம் இந்த மாதிரியான கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.  ஒவ்வொரு மாதமும் சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைக்க வேண்டும். அதன் மூலம், நீங்கள் நாட்டிற்கும் உங்கள் உடலுக்கும் சேவை செய்தவராக இருப்பீர்கள். வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையைப் பயன்படுத்த வேண்டும் என்றும், பொதுப் போக்குவரத்து அனைவருக்கும் பயனளிக்கும் என்றும் அவர் கூறினார். 

இதையும் படிங்க: தமிழ்நாட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்துவோம்..! பிரதமர், ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்..!

தங்கம் வாங்காதீங்க: 

அந்நியச் செலாவணி மற்றும் சர்வதேச நிலவரங்கள் காரணமாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில், நான் நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுக்கிறேன். நாட்டிலிருந்து அந்நியச் செலாவணி வெளியேறுவதைத் தடுக்க, தங்க இறக்குமதியைக் குறைக்க வேண்டும். அதனால்தான், பண்டிகைகள் அல்லது சுப நிகழ்வுகளின் போது ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதை நிறுத்த வேண்டும். வெளிநாட்டுப் பயணங்களையும், வெளியூர் திருமணங்களையும் குறைப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவ வேண்டும் என்று பிரதமர் மோடி மக்களை வலியுறுத்தினார்.

எரிசக்தி பாதுகாப்பு:

 'கோவிட்-19க்கு பிந்தைய சூழலும், உலகெங்கிலும் நடைபெற்று வரும் போர்களும் விநியோகச் சங்கிலியைப் பாதித்துள்ளன. இதன் காரணமாக, அண்டை நாடுகளில் எண்ணெய் விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இருப்பினும், மத்திய அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், அந்த விலைகளின் சுமை மக்கள் மீது சுமத்தப்படாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக, நாட்டில் மின்சார வாகனங்களை (EVs) நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். மேலும், ரயில்வேயில் டீசல் பயன்பாட்டையும் கணிசமாகக் குறைத்து வருகிறோம். எதிர்காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் தேவை மேலும் குறையும் என்றும், அதன் மூலம் மதிப்புமிக்க அந்நியச் செலாவணி சேமிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.'

தன்னிறைவு: 

சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும் என்று மோடி கூறினார். வெளிநாடுகளில் யூரியாவின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால் இந்தியாவில், அது விவசாயிகளுக்கு ரூ. 300க்கும் குறைவான விலையில் வழங்கப்படுகிறது. உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, மண் வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். சுதேசி என்பது வெறும் பாஜகவின் முழக்கம் மட்டுமல்ல, அது நாட்டின் கொள்கை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இந்த நிகழ்வில், அத்தியாவசியப் பொருட்களில் இந்தியப் பொருட்களுக்கும் தயாரிப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்க அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இதையும் படிங்க: புகைப்பிடிக்க தடை விதிக்கணும்..! பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share