×
 

ஜி.கே.மணியை விரட்டாமல் விடமாட்டாங்க போலயே... கருப்புச்சட்டையில் கலவரத்தை ஆரம்பித்த பாமக எம்.எல்.ஏ.க்கள்...!

அதிமுகவினரைத் தொடர்ந்து பாமக எம்எல்ஏக்கள் இன்று கருப்பு சட்டையுடன் சட்டப்பேரவைக்கு வந்தனர்.

ஜனவரி ஆறாம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் தொடங்கியது. நான்கு நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் சட்டப்பேரவை கூடியது. கடந்த கூட்டத்தின் போது 2025-26 ஆம் ஆண்டுக்கான பொதுபட்ச தாக்கல் ஆனது. அதன் மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து மார்ச் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது. 

தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. பின்னர் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆறு மாத காலத்தில் சட்டப்பேரவை கூட்ட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் நேற்று முன்தினம் சட்டபேரவை கூடியது.

இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட கூட்டம் நேற்று மீண்டும் தொடங்கியது. அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். கரூர் சம்பவம், கிட்னி திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்து கைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் பாமக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையுடன் சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர்.

இதையும் படிங்க: “உட்காருங்க...” - சட்டப்பேரவைக்குள் வெடித்த அப்பா - மகன் பஞ்சாயத்து... டென்ஷன் ஆன அப்பாவு...!

அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்களான சிவக்குமார், சதாசிவம், வெங்கடேசன் ஆகியோர் கருப்பு சட்டையுடன் வந்துள்ளனர். பாமக கொறடாவை மாற்ற வலியுறுத்தி கருப்பு சட்டையுடன் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: ராமதாஸ் ஐசியூவிற்கு போனாரா? மகன் கடமையில் இருந்து தவறிய அன்புமணி... பாமக MLA அருள் பகிரங்க குற்றச்சாட்டு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share