×
 

என்.ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி முறிவு? - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சொன்ன அதி முக்கிய தகவல்...!

எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக கூறி விட்டோம்  என்றும் கூட்டணி குறித்து பாஜக-வுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றும்  புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பது குறித்து பாஜகவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது என சேலத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

சேலம் சூரமங்கலத்தில் உள்ள ஸ்ரீ சற்குரு அப்பா பைத்திய சுவாமிகள் ஆலயத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று இரவு ,  சாமி தரிசனம் செய்தார். சத்குரு அப்பா பைத்தியசாமி  கோவிலில் மனம் உருகி வேண்டிக்கொண்டார் . சத்குரு சிலையின்  காதில் மெதுவாக பேசி தன் வேண்டுதலை தெரிவித்தார். சுமார் ஒரு மணி நேர வேண்டுதலுக்கு பின்  அனைவருக்கும் தனது கையாலேயே பிரசாதமும் வழங்கினார்.

பின்னர் முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், மீண்டும் சற்குரு ஆட்சி தொடரும் என்றம், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பது குறித்து பாஜகவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணியில் பிளவு அபாயம்..!! நடப்பது என்ன..??

டெல்லி சென்ற பாஜக-வினரிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை.  எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக கூறிவிட்டோம். அவர்கள் தான் தொடர்ந்து பேசி வருகின்றனர் என்றார். எங்கள் நிலைப்பாட்டை கூறி விட்டோம் என்றார். 

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்.9 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனுத்தாக்கல் கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், ஆளும் என்.ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள இருந்த நிலையில்,  என்.டி.ஏ கூட்டணியில் தொடர முதல்வர் ரங்கசாமி , சில நிபந்தனைகளை விதித்ததாக தகவல் வெளியானது. இந்த பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி  நீடித்தது . இந்த சூழலில், சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த முதல்வர் ரங்கசாமி, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடர்வதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னணி என்ன?

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தது. அதன்படி என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 14 தொகுதிகளை பாஜக, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி பிரித்துகொள்ள உள்ளதாக பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்திருந்தார்.

லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மாரட்டின் கட்சியான லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என ரங்கசாமி வலியுறுத்தி வருகிறார். இதனால் இருதரப்பிலும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்த, மத்திய அமைச்சரும் தேர்தல் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியாவை என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், பொதுச்செயலர் ஜெயபால் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சந்தித்தனர். ஆனால், முதல்வர் ரங்காமி அவரை சந்திக்கவில்லை. இதனால் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி நீடிக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இதையும் படிங்க: அதிமுக கோட்டைகளுக்கு குறிவைக்கும் அமித் ஷா... இன்று அவசரமாக டெல்லி விரையும் இபிஎஸ்... டீலை முடிக்க ரகசிய மீட்டிங்...?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share