×
 

கற்பனை செய்ய முடியாத துயரம்! இதயத்தை உடைக்கும் வலி.. நொறுங்கிப் போன பிரதமர் மோடி..!

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் விமான விபத்து ஏற்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி, ''கற்பனை செய்ய முடியாத துயரம்'' என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து நேற்று லண்டனுக்கு டேக் ஆப் ஆன ஏர் இந்தியா விமானம் அடுத்த சில நிமிடங்களில்,  மருத்துவக்கல்லூரி கட்டடம் மீது விழுந்து வெடித்து சிதறியது. 600 - 800 அடி உயரமே பறந்த விமானம், மருத்துவக் கல்லுாரி விடுதி மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானதில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில், ஒரேயொரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். 

 விமானம் விழுந்த கட்டடத்தில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் பலரும் உடல் கருகினர். இதனால், பலி எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்த பயணி உள்ளிட்டோர் ஆமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஆமதாபாத் வந்த பிரதமர் மோடி, விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர், விபத்து மற்றும் மீட்பு பணிகள் பற்றி பிரதமர் மோடி கேட்டறிந்தார். 

இதையும் படிங்க: மோடி பெயரில் போலி வீடியோ! லிங்கை தொட்ட நீ கெட்ட.. எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்..

ஆமதாபாத் மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி, விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பிய ஒரே பயணி விஷ்வாஸ் குமாரிடமும் மோடி உடல் நலம் விசாரித்தார். அப்போது விபத்தில் இருந்து தாம் தப்பியது பற்றி விஷ்வாஸ் அவரிடம் கூறியுள்ளார். அதன் பின், ஆமதாபாத் ஏர்போர்ட் சென்ற பிரதமர் மோடி, விமான விபத்து மற்றும் மீட்பு சீரமைப்பு பணிகள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இது குறித்து பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ஆமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டேன். பேரழிவு நடந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மீட்பு பணிகள் நடந்து வருகிறது. அயராது உழைக்கும் அதிகாரிகள் சந்தித்தேன். கற்பனை செய்ய முடியாத துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. 

விமான விபத்தில் நாம் அனைவரும் பேரழிவிற்கு ஆளாகியுள்ளோம். இதயத்தை உடைக்கும் வகையில் பல உயிர்களை இழந்தது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. துயரமடைந்த அனைத்து குடும்பங்களுக்கும் இரங்கல்கள் தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் வலியை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஓம் சாந்தி. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நீங்க சொல்லுற மாதிரிலாம் பண்ண முடியாது! முகமது யூனுஸ் கோரிக்கையை நிராகரித்தார் பிரதமர் மோடி..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share