×
 

விதிகளை மீறி கட்டணம் வசூல்!! தனியார் மருத்துவ கல்லுாரிகள் அடாவடி! வேடிக்கை பார்க்கிறதா மாநில மருத்துவ கல்வி இயக்குநரகம்?

தேசிய மருத்துவ ஆணையமான, என்.எம்.சி., கட்டுப்பாட்டை மீறி, தனியார் மருத்துவ கல்லுாரிகள், ஐந்தாண்டுகள் வரை கல்வி கட்டணம் வசூலிப்பதை, மாநில மருத்துவ கல்வி இயக்குநரகம் தடுக்காமல், வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் (NMC) விதிகளை மீறி தனியார் மருத்துவ கல்லூரிகள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஐந்து ஆண்டுகள் வரை கல்வி கட்டணம் வசூலிப்பதை மாநில மருத்துவ கல்வி இயக்குநரகம் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அரசு அதிகபட்சமாக 13.5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் தனியார் மருத்துவ கல்லூரிகள் விடுதி, உணவு, போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு கூடுதலாக வசூலித்து ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரை பெறுகின்றன. இதுதவிர கணக்கில் வராத வகையில் 3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை நன்கொடை வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

மருத்துவ ஆணையம் தெளிவாக உத்தரவிட்டுள்ளபடி, எம்.பி.பி.எஸ். படிப்பு 4.5 ஆண்டுகள் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். மீதமுள்ள ஒரு ஆண்டு உள்ளுறைப் பயிற்சி (CRRI) காலம் என்பதால் அந்த ஆண்டுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது. மாறாக மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். ஆனால் பெரும்பாலான தனியார் மருத்துவ கல்லூரிகள் 5 ஆண்டுகளுக்கும் கட்டணம் வசூலித்து வருகின்றன.

இதையும் படிங்க: 10ம் வகுப்பு தேர்வு மறுதேர்வு எப்போது? மதிப்பெண் சான்றிதழ் எப்போ கிடைக்கும்? பள்ளிக்கல்வித்துறை அப்டேட்!

பெற்றோர்கள் கூறுகையில், “என்.எம்.சி. உத்தரவை மீறி கல்லூரிகள் 6 மாதத்திற்கான கட்டணத்தை கூடுதலாக வசூலிக்கின்றன. இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தி.மு.க. அரசைப் போலவே த.வெ.க. அரசும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சாதகமாக செயல்படுகிறது” என்றனர்.

மருத்துவக் கல்வி இயக்குநரகம் இந்த மீறல்களுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பெற்றோரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மருத்துவப் படிப்புக்கு 80 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும் நிலையில், கட்டண மீறல்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகளிடம் கேட்டபோது, “புகார்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மட்டும் கூறினர். எனினும் இதுவரை எந்த கல்லூரிக்கும் எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தனியார் மருத்துவக் கல்வியில் நடைபெறும் இந்த முறைகேடுகள் குறித்து உயர் மட்டத்தில் உடனடி தலையீடு தேவை என்று பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தவெக அமைச்சர் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து அரங்கேறிய அவலங்கள்... அதிர்ச்சியில் மக்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share