×
 

சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் அடுத்தடுத்து விஷம் வைத்துக்கொலை..!! சைக்கோ கில்லரின் விபரீத ஆசை..!!

முதலில் வெண்காரத்தை நாய்க்கு கொடுத்து மாதிரி பார்த்துவிட்டு, பின்னர் கொலைகளை செயல்படுத்தியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பலோடா பஜார் மாவட்டத்தை உலுக்கிய தொடர் மர்ம மரணங்கள் தொடர்பாக முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் எட்டு பேரை திட்டமிட்டு விஷம் வைத்து கொலை செய்ததாகக் கூறப்படும் ராம் சஹய் ஜெய்ஸ்வால் (46) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கார்வே கிராமத்தைச் சேர்ந்த ராம் சஹய் ஜெய்ஸ்வால், மளிகைக் கடை நடத்தி வந்தவர். ஊராட்சி தேர்தல் தொடர்பான பழைய விரோதம், கடன் பிரச்சினைகள், நிலத் தகராறுகள், சூனியம் குறித்த மூடநம்பிக்கைகள் மற்றும் தனிப்பட்ட பகைமை உள்ளிட்ட பல காரணங்களால் சிலர்மீது அவர் ஆழ்ந்த வெறுப்புடன் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், குறிவைத்த நபர்களை தனது வீட்டிற்கு அல்லது தனிப்பட்ட சந்திப்புகளுக்கு அழைத்து மது அருந்தச் செய்துள்ளார். அந்த மதுவில் விஷப்பொருள் கலக்கப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மது அருந்திய சில மணி நேரங்களிலோ அல்லது அடுத்த ஓரிரு நாட்களிலோ பாதிக்கப்பட்டவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர். இதேபோன்ற முறையில் கடந்த நான்கு மாதங்களில் எட்டு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: குழந்தையின் கழுத்தில் இருந்த `தழும்பு’... சிறுமி மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்... விசாரணை வளையத்தில் தாய்...!

இந்நிலையில், ஒன்பதாவது நபரான கார்த்திக் குமார் உயிர் தப்பியது வழக்கின் திருப்புமுனையாக அமைந்தது. அவர் திடீரென உடல்நலக்குறைவுக்கு ஆளானபோது, அதற்கு முன்பு ராம் சஹய்யுடன் மது அருந்தியிருந்ததை கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சந்தேகம் வலுத்த நிலையில், கிராம மக்கள் ஜூன் 6ஆம் தேதி போலீஸில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸார், புதைக்கப்பட்டிருந்த ஏழு பேரின் உடல்களை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். ஒருவர் ஏற்கனவே தகனம் செய்யப்பட்டிருந்ததால் அவரது உடலை ஆய்வு செய்ய முடியவில்லை. மேலும், எலிகளை கொல்லும் நோக்கில் வாங்கியதாக கூறி போராக்ஸ் பவுடரை பெற்ற ராம் சஹய், அதனை முதலில் நாய்களுக்கு உணவுடன் கலந்து சோதனை செய்த பின்னரே மனிதர்களுக்கு பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலைகளை செய்த பிறகும் தப்பிச் செல்லாமல், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, இறுதிச்சடங்குகளில் பங்கேற்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவது போன்ற செயல்களால் சந்தேகத்தைத் தவிர்த்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராம் சஹய் ஜெய்ஸ்வால் மீது எட்டு கொலை வழக்குகளும், ஒரு கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
 

இதையும் படிங்க: தாயா இல்லை பேயா?... கள்ள உறவுக்காக ஒன்றரை வயது குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற அம்மா கைது...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share