×
 

ரூபாய் நோட்டுகளில் புதிய பாதுகாப்பு அம்சங்கள்!! அதிரடியை ஆரம்பித்த RBI! கலக்கல் திட்டம்!

ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிய அம்சங்களை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது.

இந்திய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய அம்சங்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. குறிப்பாக ₹500, ₹200 மற்றும் ₹100 நோட்டுகளில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கள்ள நோட்டுகளை முற்றிலும் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி தற்போது நோட்டுகளின் ஆயுட்காலத்தை நீட்டிக்க வார்னிஷ் பூச்சு பயன்படுத்தும் வாய்ப்பையும் ஆய்வு செய்து வருகிறது. மேலும், நோட்டுகளை அச்சிடும் தாளை நுண்ணுயிர் கொல்லி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டதாக மாற்றும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் நோட்டுகளின் சுகாதாரம் மேம்படுத்தப்பட்டு, நீண்ட காலம் பயன்படுத்த முடியும்.

2026 மார்ச் இறுதியில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 11.9 சதவீதம் உயர்ந்து ரூ.41.2 லட்சம் கோடியாகவும், நோட்டுகளின் எண்ணிக்கை 10.5 சதவீதம் அதிகரித்து 17.1 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. நாணயங்களின் மதிப்பும் 11.4 சதவீதம் உயர்ந்து ரூ.40,814 கோடியை எட்டியுள்ளது. 

இதையும் படிங்க: வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையிலும், தனிநபர்கள் மற்றும் சிறு வணிகர்கள் இன்னும் ரொக்கப் பணத்தையே அதிகம் நம்பியிருப்பது இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என ரிசர்வ் வங்கி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

தற்போது ₹500 நோட்டுகள் ரொக்கப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்கின்றன. மொத்த நோட்டுகளில் 41.2 சதவீத எண்ணிக்கையையும், மொத்த மதிப்பில் 85.5 சதவீதத்தையும் இந்த நோட்டுகள் கொண்டுள்ளன. ₹2000 நோட்டுகள் ஏறக்குறைய முழுமையாக திரும்பப் பெறப்பட்ட பிறகு ₹500 நோட்டுகளின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளில் 97.6 சதவீதத்தை வங்கிகளே அடையாளம் கண்டுள்ளன. இந்நிலையில், 2026-ம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்து புதிய பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ரூபாய் நோட்டுகளை படிப்படியாக புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி தயாராகி வருகிறது. 

இந்த மாற்றங்கள் ரொக்கப் பணத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணப் புழக்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.1 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், பாதுகாப்பான மற்றும் நீடித்து நிலைக்கும் நோட்டுகள் பொருளாதாரத்துக்கு பெரும் பலம் சேர்க்கும். 

இதையும் படிங்க: இந்திய பொருளாதாரத்தில் புயல் வீசப்போகிறது! சாமானிய மக்கள் பாவம்! ராகுல்காந்தி கொடுக்கும் வார்னிங்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share