×
 

#BREAKING: சோகத்தில் முடிந்த RCB வெற்றிக் கொண்டாட்டம்... உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த வெற்றி கொண்டாட்டத்தில் பங்கெடுப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் பெங்களூருவில் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அன்புக்குரியவர்களே இழந்தவர்களுக்கு இந்த துயரமான நேரத்தில் ஆழ்ந்த இரங்கல்கள் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: டிரம்பிடம் மோடி சரணடைந்துவிட்டார்... லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பகீர் குற்றச்சாட்டு!!

பெங்களூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஜூலை 21ல் கூடுகிறது பார்லிமென்ட்! ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க மத்திய அரசு தயார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share