×
 

#BREAKING: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் A1 குற்றவாளி ரவுடி நாகேந்திரன் மரணம்...!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் ஏ1 குற்றவாளி ரவுடி நாகேந்திரன் மரணமடைந்தார்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5 ஆம் சென்னையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலைக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆருத்ரா கோல்ட் மோசடி விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதாகவும், இதனால் ரவுடி ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

மேலும், சென்னையின் நிழல் உலகத்தில் மூன்று குழுக்களுக்கு இடையேயான ஆதிக்கப் போட்டியும் ஒரு காரணமாக இருக்கலாம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் ஜூலை 14 அன்று போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரன் மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகேந்திரன் உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதையும் படிங்க: 2026 தேர்தலுக்கு தயாராகும் திமுக! சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்! கலக்கத்தில் மா.செக்கள்!

ஆம்ஸ்ட்ராங் உடனான பகை, நாகேந்திரனின் குடும்பத்தின் அரசியல் ஆகிரமிப்பிலிருந்து தொடங்கியது. அவரது மகன் என். அஸ்வத்தாமன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் முன்னாள் நிர்வாகியாக இருந்தவர்., அஸ்வத்தாமன், ஆம்ஸ்ட்ராங்குடன் நில விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ரவுடி நாகேந்திரன் ஏ1, சம்போ செந்தில் ஏ2 என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குற்றவாளி ஞானசேகரனுக்கு குண்டாஸ் தேவையா? பதிலளிக்க ஐக்கோர்ட் உத்தரவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share