மாநிலங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன்: மத்திய அரசு அதிரடி..!! உள்கட்டமைப்பு திட்டங்கள் புதிய உத்வேகம்..!!
நடப்பு நிதியாண்டில், மத்திய அரசால் ஏற்கனவே ரூ.20 ஆயிரம் கோடி மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு மூலதன செலவு (கேபிட்டல் எக்ஸ்பெண்டிச்சர்) கடன் வழங்க முடிவு செய்துள்ளது. இந்த தொகை வட்டியில்லா கடனாக அளிக்கப்படுவதால், மாநில அரசுகளுக்கு பெரும் நிதி சுமை ஏற்படாமல் பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், மொத்த தொகையில் 45 சதவீதம் அதாவது சுமார் ரூ.90,000 கோடி முதல் காலாண்டிலேயே விடுவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிதி முக்கியமாக ரெயில்வே திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம், மெட்ரோ ரெயில் அமைப்புகள், குடிநீர் வழங்கல் திட்டங்கள் மற்றும் மின் உற்பத்தி, பரிமாற்றம் ஆகிய உள்கட்டமைப்பு துறைகளுக்கு பயன்படுத்தப்படும்.
இத்தகைய திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதோடு, வேலைவாய்ப்புகளை பெருக்கவும் உதவும். 2025-26 நிதியாண்டில் இதே போன்ற ஒதுக்கீட்டின் கீழ், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் மாநிலங்களுக்கு ரூ.40,000 கோடி கடன் வழங்கப்பட்டது. இந்த நிதியுதவியால் நாடு முழுவதும் 9,000க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் சாலை இணைப்பு திட்டங்கள், ரெயில்வே மேம்பாடு, நகர்ப்புற குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் அடங்கும்.
இதையும் படிங்க: ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கணுமா..?? மேலும் ஓராண்டு கால அவகாசம் நீட்டிப்பு.. மத்திய அரசு அதிரடி..!!
நடப்பு நிதியாண்டில் இதுவரை மத்திய அரசு ரூ.20,000 கோடி வட்டியில்லா கடனாக மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் மேலும் ரூ.70,000 கோடி விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மொத்த ஒதுக்கீட்டில் கணிசமான பகுதி விரைவில் மாநிலங்களுக்கு சென்றடையும்.இந்த நடவடிக்கை மத்திய-மாநில ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
உள்கட்டமைப்பு துறையில் அதிக முதலீடு செய்வதன் மூலம், நாட்டின் ஜிடிபி வளர்ச்சி இலக்கை எளிதில் எட்ட முடியும் என்றும், கிராமப்புறம் முதல் நகர்ப்புறம் வரை அனைத்து பகுதிகளிலும் சமமான வளர்ச்சி ஏற்படும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், இந்த கடன் திட்டம் மாநில அரசுகளுக்கு நிதி நிர்வாகத்தில் நெகிழ்வுத்தன்மையை அளிப்பதோடு, தாமதமான திட்டங்களை விரைவுபடுத்தவும் உதவும்.இத்திட்டத்தின் முழு பலனும் அடுத்த சில மாதங்களில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மத்திய அரசின் பொருளாதார நிர்வாகத் தோல்வி..!! பெரும் நெருக்கடியை நோக்கி இந்தியா..!! ராமதாஸ் கடும் கண்டனம்..!!