ஆடைகளை களைவதும் பலாத்கார முயற்சிதான்!! போக்சோ வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி!
அந்தரங்க உறுப்புகளை தொடுவதும், ஆடைகளை களைவதும் பலாத்கார முயற்சி ஆகாது என அலகாபாத் ஐகோர்ட் கூறியதை எப்படி ஏற்க முடியும்.
உத்தர பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் 2021-ஆம் ஆண்டு நடந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 14 வயது சிறுமியுடன் தாய் சொந்த ஊருக்கு நடந்து சென்றபோது, அதே ஊரைச் சேர்ந்த அசோக் மற்றும் ஆகாஷ் ஆகியோர் சிறுமியை பைக் ஏற்றி செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றனர்.
ஆள் அரவமற்ற இடத்தில் பைக் நிறுத்தி, சிறுமியின் ஆடைகளை களைந்து, மார்பகங்களை பிடித்து, அந்தரங்க உறுப்புகளை தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டனர். பலாத்காரம் செய்ய முயன்றனர்.
சிறுமி அலறியதால் ஊர் மக்கள் ஓடி வந்தனர். சிறுமியை விட்டுவிட்டு இருவரும் தப்பினர். தாய் போலீசில் புகார் அளித்தார். மாவட்ட கோர்ட் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. ஆனால் அலகாபாத் உயர் நீதிமன்றம், "இது பலாத்கார முயற்சி அல்ல, தயாரிப்பு மட்டுமே" என்று கூறி இருவரையும் விடுதலை செய்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 88 வயதில் களத்தில் இறங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்..!! உதயமான புதிய கட்சி..!!
சமூக ஆர்வலரும் மூத்த வக்கீலுமான ஷோபா குப்தா சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் எழுதினார். தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. "ஆடைகளை களைவது, மார்பகங்களை பிடிப்பது, அந்தரங்க உறுப்புகளை தொடுவது பலாத்கார முயற்சி அல்ல என்று எப்படி கூற முடியும்? சாட்சிகள் உள்ளன. மாவட்ட கோர்ட் உத்தரவு செல்லும். அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு ரத்து" என்று உத்தரவிட்டது. இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடர உத்தரவிட்டது.
மேலும், பாலியல் வழக்குகளை கையாளும் நீதிபதிகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை உருவாக்க, நிபுணர்கள் குழுவை அமைக்க தேசிய நீதித்துறை அகாடமிக்கு உத்தரவிட்டது. இந்திய சமூக அமைப்புக்கு ஏற்ற வகையில், உணர்திறன் மற்றும் இரக்கத்துடன் வழக்குகளை கையாள வேண்டும் என்று வலியுறுத்தியது. வெளிநாட்டு மாதிரிகளை நேரடியாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் கூறியது.
இந்த தீர்ப்பு சிறுமிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற போராட்டத்திற்கு பெரும் வெற்றியாக அமைந்துள்ளது. பாலியல் குற்றங்களில் நீதிமன்றங்கள் உணர்திறன் காட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த வழக்கு நீதித்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணி... ஒரே கொண்டாட்டம்தான்..!! பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தேமுதிக தொண்டர்கள்..!!!