×
 

கல்வி நிதி விவகாரம்.. தமிழக அரசு கோரிக்கை நிராகரிப்பு.. சுப்ரீம் கோர்ட் உத்தரவால் திமுக அப்செட்..!

கல்வி நிதியை விடுவிக்க கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் இன்று நிராகரித்தது.

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருவதாக தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளிப்படையாகவே அறிவித்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. சமக்ர சிக்ஷா திட்ட நிதி ரூ.2151.59 கோடி, அதற்கான 6 % வட்டி ரூ.139.70 கோடியும் சேர்த்து ரூ.2,291 கோடி வழங்க உத்தரவிட வேண்டுமென கடந்த மாதம் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது. 

இதையும் படிங்க: குடிநீர் வாரியத்தில் கோடிக்கணக்கில் பணம் சுருட்டல்.. தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தியது என்ன..?

இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் இன்று நிராகரித்தது. இந்த நிதி எவ்வளவு காலமாக வழங்கப்படவில்லை. இப்போது என்ன அவசரம் என நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது.

மத்திய அரசு கல்வி நிதியை விடுவிக்காததால் தமிழ்நாட்டில் சுமார் 43 லட்சம் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளதால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் பி. வில்சன் கோரிக்கை முன்வைத்தார். இருப்பினும் தமிழக அரசு வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுத்த போதிலும், பிரதான வழக்கானது வழக்கமான விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு மனுவில், சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதி பெறுவதற்கான மாநில உரிமையை மத்திய அரசு தடுத்து வைத்துள்ளது.  இதன் மூலம் கூட்டாட்சி கொள்கையை மத்திய அரசு புறக்கணிக்கிறது. கல்வி நிதியை நிறுத்துவது என்பது  கல்வி தொடர்பாக சட்டம் இயற்றும் மாநிலத்தின் அரசியலமைப்பு அதிகாரத்தை கையகப்படுத்துவதற்கு சமம். 

மத்திய அரசு தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கை -2020-ஐ முழுமையாக அமல்படுத்தவும், மாநில கல்வி முறையிலிருந்து விலகவும் கட்டாயப்படுத்த முயல்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: டெல்லியில் வீடுகளை இழந்த தமிழர்கள்.. அனைத்து உதவிகளும் செய்யப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share