பங்குச் சந்தை கட்டுப்பாடுகளில் பெரிய மாற்றம்? SEBI தலைவர் துஹின் காந்தா பாண்டே தகவல்!
இந்திய பங்குச் சந்தை மற்றும் மூலதனச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான SEBI, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கான விதிமுறைகள் மற்றும் வெளிப்படுத்தல் நடைமுறைகளில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகச் செபி தலைவர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.
இந்தியப் பங்குச் சந்தை மற்றும் மூலதனச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கான விதிகள் மற்றும் வெளிப்படுத்தல் நடைமுறைகளில் அதிக முக்கியமான திருத்தங்கள் அடங்கிய ஒரு வரைவு ஆவணத்தை அடுத்த 4 முதல் 6 மாதங்களில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகச் செபியின் தலைவர் துஹின் காந்தா பாண்டே அறிவித்துள்ளார்.
சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்புடன் நடந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தச் சீராய்வு அறிக்கை, நாட்டின் லிஸ்டிங் ஃபிரேம்வொர்க்கில் அடுத்து வரும் ஆண்டுகளில் செய்யப்படவுள்ள புரட்சிகர மாற்றங்களின் தொடக்கமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
தற்போதுள்ள குழப்பங்களைத் தெளிவுபடுத்தும் விதமாக, தொழில் துறையின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சீராய்வு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் புதிய கால நிறுவனங்கள், ப்ரோமோட்டர்கள் தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல முக்கியமான அம்சங்களில் புதிய முன்மொழிவுகள் இடம்பெற உள்ளன. மேலும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான (SME) பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் செபி சிறப்புக் கவனத்தில் எடுத்துள்ளது.
இதையும் படிங்க: ராஜ் பவனைத்தொடர்ந்து பெயர் மாற்றப்பட்ட பிரதமர் அலுவலகம்.. மத்திய அரசின் புதிய அறிவிப்பு!
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலதனச் சந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகளை விரிவாக்கும் நோக்கில் ஒரு திட்டமிட்ட செயல்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் தென்னிந்தியாவிலிருந்து மட்டும் 1,000 MSME-களைப் பங்குச் சந்தைக்குக் கொண்டு வர இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) உதவ வேண்டும் என்று செபி தலைவர் பாண்டே அறைகூவல் விடுத்துள்ளார்.
மேலும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில், ஐபிஓ (IPO) விவரங்களை எளிதில் புரியக்கூடிய ஒரு சுருக்கமான அறிக்கை வடிவமைப்புக்கான கன்சல்டேஷன் பேப்பரை செபி ஏற்கனவே வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வரவிருக்கும் இந்தப் பிரம்மாண்ட திருத்தம், இந்திய மூலதனச் சந்தையில் வெளிப்படைத்தன்மையையும், புதிய தொழில் நிறுவனங்களின் பங்கேற்பையும் மேலும் அதிகரிக்கும் என்று நிர்வாக மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வாக்காளர் பட்டியல் பணிச்சுமை: உத்தரப் பிரதேச ஆசிரியர் கடிதம் எழுதி வைத்து தற்கொலை!