×
 

சீமான் சொல்வது பொய்..! தமிழ் தேர்வில் விலக்கா? உண்மையை உடைத்த TN FACT CHECK..!

மொழிவாரி சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் விலக்கு என்று பரவும் தகவல் தவறானது என தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழியை கட்டாயமாக வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்வலியுறுத்தி இருந்தார். இந்த ஆண்டு தமிழ் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது தமிழ் மொழி மீது சிறிதும் பற்றின்மையையே காட்டுகிறது என்றும் தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசின் அனைத்து உதவிகளையும், சலுகைகளையும் பெற்று இயங்கும் தனியார் ஆங்கில வழி மற்றும் பிறமொழிப் பள்ளிகள், தமிழைக் கற்பிக்க மறுப்பதும், அதற்கு திமுக அரசு துணைபோவதும் தமிழ் மொழிக்கும், மண்ணுக்கும் செய்கின்ற பெருந்துரோகம் எனவும் சீமான் கூறியிருந்தார்.

பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயர் இருக்கக்கூடாது, பள்ளிகளில் தமிழ்மொழித் தேர்வு இருக்க கூடாது என்று செயல்படுவதுதான் திமுகவின் தமிழ் பற்றா எனக் கேட்டார். இந்தி நெவர், இங்கலிஷ் எவர்’ என்றவர்கள் ஆட்சியில் எங்கு காணினும் ஆங்கிலம் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றது என்றும் குற்றம்சாட்டினார். தமிழ்மொழித் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதை கைவிட்டு, தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும் நடப்பு கல்வியாண்டு முதல் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், சீமானின் அறிக்கையை சுட்டிக்காட்டி தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. தமிழை தாய் மொழியாக கொண்டிராத, 10-ம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக தெரிவித்துள்ளது. உண்மை என்னவென்றால், மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து 2020 முதல் 2023-ம் ஆண்டு வரை விலக்கு அளித்து இருந்தது மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம். பள்ளிகளின் கோரிக்கையால் 2023-24 கல்வியாண்டிற்கு மட்டும் இவ்விலக்கு நீட்டிக்கப்பட்டது என்றும் ஆனால், கடந்த 2025ம் ஆண்டு விலக்கு அளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: NO WORK NO PAY: அரசு ஊழியர்களுக்கு பறந்த ஆர்டர்..!! தமிழக அரசு வார்னிங்..!! சப்போர்ட் செய்யும் திமுக..!!

மார்ச்- ஏப்ரல் 2025 10- வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8,86,184 என்றும் இதில், பகுதி 1-ல் தமிழ்மொழிப்பாடம் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8,86,089 என்றும் குறிப்பிட்டது.. கடந்த ஆண்டில் 95 மாணவர்கள் மட்டுமே பகுதி I-ல் பிற மொழிப் பாடங்களை எழுதியுள்ளதாகவும், இவர்கள் 9ம் வகுப்பு வரை வேறு மாநிலங்களில் பயின்றவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. தவறான தகவலை பரப்ப வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தொடரும் பிரச்சனை... துணைவேந்தர் நியமனம்..! அரசின் தேடுதல் குழுவுக்கு ஆளுநர் ரவி எதிர்ப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share