வெளியுறவுத்துறை அமைச்சருக்கே ஆப்பா? கட்சி தாவும் சசிதரூர்? புகைச்சலில் பாஜ- காங்கிரஸ்..!
திருவனந்தபுரம் எம்.பி சசிதரூர் பிரதமர் மோடிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் காங்கிரஸ், பாஜக இடையே புகைச்சல் அதிகரித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் பெயரில் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் பெரும் பாதிப்பை சந்தித்தது. அதற்காக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை பாராட்டினார்.
இந்தியா எடுத்த நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு தெரிவிக்க பிரதமர் மோடி விரும்பினார். மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அந்தக் குழுக்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கிய பின் நாடு திரும்பின.
ஒரு குழுவுக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமை வகித்தார். வெளிநாட்டுப் பயணங்களிலும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை சசி தரூர் புகழ்ந்து வந்தார். அமெரிக்கா, கொலம்பியா உள்பட 5 நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்ட சசி தரூர், அந்நாட்டின் ஆட்சியாளர்கள், கல்வியாளர்கள் முதலானவர்களை சந்தித்து பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். நாடு திரும்பிய பின் தனது பயணம் குறித்து அவர் ஒரு நாளிதழில் கட்டுரை எழுதினார்.
இதையும் படிங்க: மோடி போட்ட ஸ்கெட்ச்.. சசிதரூரை கொம்பு சீவிவிட்ட பாஜக.. ட்விட்டரில் முட்டுகொடுக்கும் கார்கே!
அதில் பிரதமர் மோடியின் ஆற்றல், ஊக்கம், விருப்பமுடன் பங்கேற்கும் தன்மை போன்றவை உலக அரங்கில் இந்தியாவின் முதன்மை சொத்தாக இருக்கிறது என புகழந்து தள்ளினார். மோடியை சசி தரூர் புகழ்வது, பாஜ அரசை பாராட்டுவது காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கு எரிச்சலூட்டியது.
இதனிடையே ஐக்கிய நாடுகள் சபையில், பல்வேறு பதவிகளில் பணியாற்றிய தரூர், தற்போது, பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார்; மேலும், வெளியுறவுத் துறையின் பார்லிமென்ட் குழுவின் தலைவராகவும் உள்ளார்.
ஒரு வெளியுறவுத் துறை அமைச்சர் செய்ய வேண்டிய விஷயங்களை செய்து வருகிறார் சசிதரூர். இந்த விவகாரங்கள் ராகுல் காந்திக்கும், மல்லிகார்ஜுன கார்கேவிற்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. சசிதரூரை, காங்., மறைமுகமாக விமர்சித்து வருகிறது. 'கட்சியிலிருந்து இவர் விரைவில் நீக்கப்படலாம்; இதையடுத்து, இவர் பா.ஜ.,வில் இணையலாம்' எனவும் காங்கிரசுக்குள் பேசப்படுகிறது.
இன்னொரு பக்கம், பா.ஜ.,விற்குள்ளும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 'வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, காங்கிரசின் தரூருக்கு இந்த அளவிற்கு எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்?' என, புகைச்சல் நிலவுகிறதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: சசிதரூர் மேஜிக் சக்சஸ்.. பயங்கரவாதத்தை வேரறுக்க துணைநிற்போம்.. இந்தியாவுக்கு அமெரிக்கா சப்போர்ட்..