×
 

அசீம் முனீருக்கு விருந்தா? ஒசாமாவை மறந்தாச்சா? அமெரிக்காவுக்கு சசிதரூர் சுளீர் கேள்வி..!

பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் பிறப்பிடமாக திகழ்கிறது. பயங்கரவாதிகளை உருவாக்கி, வளர்த்துவிட்டு இந்தியாவிற்கு எதிராக கொம்பு சீவிவிடுகிறது.

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரை அழைத்து விருந்தளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் செயல் குறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் - டொனால்டு டிரம்ப் சந்திப்பு குறித்த முழு விவரங்கள் எனக்கு தெரியவில்லை. டிரம்ப் அளித்த விருந்தில் பங்கேற்ற முனீர், அமெரிக்க அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் எனக் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பாக்., தளபதிக்கு அவர்கள் விருந்தளிக்கட்டும், அவரை கவுரவிக்கட்டும். அதே சமயம், பயங்கரவாததத்தை ஆதரிக்காமல் இருப்பது, பயங்கரவாதிகளை வளர்த்துவிடாமல் இருப்பது, அவர்களுக்கு நிதி அளிக்காமல் இருப்பது, இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை துாண்டி விடாமல் இருப்பது குறித்தும், அமெரிக்கா பாடம் எடுக்க வேண்டும். 

பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் பிறப்பிடமாக திகழ்கிறது. பயங்கரவாதிகளை உருவாக்கி, வளர்த்துவிட்டு இந்தியாவிற்கு எதிராக கொம்பு சீவிவிடுகிறது. அந்த பயங்கரவாதிகளை திருப்பி அடிப்பதும், எங்கள் மீது தாக்குதல் நடத்துவபர்களை அழிப்பதும் எங்கள் உரிமை மட்டுமல்ல கடமையும் கூட. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையில் வெளிநபர்கள் யாரும் பஞ்சாயத்து செய்வதை இந்தியா ஒரு போதும் விரும்பியதில்லை. இதைத் தான் பிரதமர் மோடி கூறினார். இந்தியா - பாக்., சண்டை நேரத்தில் மத்திய அரசும், நம் முப்படைகளும் இதே கருத்தைத் தான் கூறின. 

இதையும் படிங்க: ட்ரம்ப் அழைத்தும் அமெரிக்க செல்ல மறுத்த மோடி.. தனி அறையில் சந்தித்த பாக். ராணுவ தளபதி.. வெடிக்கும் புது பூகம்பம்..!

நம் எம்பிக்களும் குழுவுடன் நான் அமெரிக்கா சென்றிருந்த போது, அந்நாட்டு துணை ஜனாதிபதியிடம் நானும் இதைத் தான் கூறினேன். இந்தியாவின் மீது யாரும் அழுத்தம் தர முடியாது. அமெரிக்கா விரும்பினால் பாகிஸ்தான் மீது அழுத்தம் தரலாம். அது அவர்கள் விருப்பம். பாக்., தளபதிக்கு விருந்தளிக்கலாம். அதை அவர் விரும்பி ஏற்கலாம். 

ஆனால், சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின் லேடனை அமெரிக்கர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். அமெரிக்காவின் இரண்டு மிகப் பெரிய கட்டடங்களை தகர்த்து, 2,000 பேரின் சாவுக்கு காரணமான பின்லேடன், பாகிஸ்தானின் ராணுவ முகாமுக்கு மிக அருகில் பதுங்கியிருந்தது உலகம் அறிந்ததே. ஒசாமாவுக்கு புகழிடம் அளித்த பாகிஸ்தான், அவன் எங்கிருக்கிறான் என கடைசி வரை தெரியாது என்றது. ஆனால், அமெரிக்க படை பின்லேடனை அமெரிக்காவில் வைத்து தான் கொன்றது. 

இதையெல்லாம் அமெரிக்கர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். இத்தனைக்கு மத்தியிலும் அசீம் முனீரை அழைத்து அமெரிக்க அதிபர் விருந்தளிக்கிறார் என்றால் அது அமெரிக்காவின் விருப்பம். இந்தியா - பாக்., சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா மட்டுமல்ல வேறு எவரது தலையீடும் இல்லாமல் தான் நம் அரசு நடவடிக்கை எடுத்தது. இதை அரசும் தெளிவுபடுத்தி உள்ளது என சசி தரூர் கூறினார்.     

இதையும் படிங்க: அணு ஆயுத இருப்பில் டாப் கியரில் இந்தியா! அடிச்சா மொத்தமா முடிஞ்சிரும்.. குலை நடுங்கி கிடக்கும் பாக்.,

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share