சொல்லி அடிக்கும் ஈரான்!! கலங்கும் ட்ரம்ப் படை! போரில் 4வது விமானத்தை இழந்தது அமெரிக்கா!
ஈரானுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்த போது, அமெரிக்காவின் கே.சி.-135 ரக வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளாகியதில், கீழே விழுந்து நொறுங்கியது. இதன்மூலம், இந்தப் போரில் அமெரிக்கா 4வது விமானத்தை இழந்துள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதலால் தொடங்கிய ஈரான் மீதான போர் இரண்டு வாரங்களை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ராணுவத்துக்கு மீண்டும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஈராக்கின் மேற்குப் பகுதியில் KC-135 ரக வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்று கீழே விழுந்து முற்றிலும் நொறுங்கியது. இதன்மூலம், போரில் அமெரிக்கா இதுவரை இழந்த விமானங்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (CENTCOM) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "மேற்கு ஈராக்கில் KC-135 விமானம் விபத்துக்குள்ளானது. மற்றொரு KC-135 விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்த விபத்து எதிரிகளின் தாக்குதலாலோ அல்லது நட்பு நாட்டுப் படைகளின் தவறுதலான தாக்குதலாலோ ஏற்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தின் சரியான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், போரின் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா பல்வேறு விமான இழப்புகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக, குவைத் படைகள் தவறுதலாக அமெரிக்காவின் மூன்று F-15E ரக போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நீடிக்கும் போர் பதற்றம்! சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! வார்னிங் கொடுக்கும் ஐநா!
இப்போது KC-135 விமான இழப்புடன், அமெரிக்க ராணுவத்தின் வான்வழி எரிபொருள் நிரப்பும் திறன் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. KC-135 விமானங்கள் போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் முக்கிய பங்கு வகிப்பவை என்பதால், இந்த இழப்பு 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி'யின் தாக்குதல் திட்டங்களை பாதிக்கலாம் என்று ராணுவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஈரான் தரப்பில் இருந்து இதுவரை கடுமையான பதிலடி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி ஈரானின் கடற்படை தளங்கள், ஏவுகணை தளங்கள், விமானப்படை தளங்கள் ஆகியவற்றை தொடர்ந்து தாக்கி வருகிறது. ஆனால், இந்த விமான விபத்து அமெரிக்க ராணுவத்தின் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது. போர் தொடங்கிய பிப்ரவரி 28 முதல் இன்று வரை (மார்ச் 13, 2026) அமெரிக்கா மொத்தம் 4 விமானங்களை இழந்துள்ளது. இது உலக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சம்பவம் போரின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும் என்றும், இரு தரப்பும் மேலும் கடுமையான நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: மொஜ்தபா கமேனி உயிருக்கு உத்தரவாதம் கிடையாது! ஈரான் புதிய ஆட்சியாளருக்கு இஸ்ரேல் பகீரங்க மிரட்டல்!