×
 

ரீல்ஸ் உலகம் உங்களை ஏமாற்றிவிடும்! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த ஸ்ட்ராங் அட்வைஸ்!

ரீல்ஸ்கள் ஆதிக்கம் செய்யும் காலத்தில் குறுக்கு வழிகள் உங்களை வீழ்த்திவிடும் என முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டு பிரதமர் மோடி பேசியுள்ளார்.

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் கலாச்சாரம் மற்றும் இன்ஃப்ளுயன்சர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் தற்போதைய காலகட்டத்தில், குறுகிய பாதைகள் அல்லது குறுக்கு வழிகள் இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பாதகமாக அமைந்து வீழ்த்திவிடும் என்றும், இளைஞர்கள் வழிகாட்டிகளாகச் சிறந்த மனிதர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களை வாசிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் அறிவுறுத்தியுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் வாழ்க்கை போராட்டங்கள், சேவை மற்றும் அவரது சாதனைகளைப் பிரதிபலிக்கும் வகையில் எழுதப்பட்ட 'Triumph of the Indian Republic: My Life, My Struggles' என்ற சுயசரிதை நூல் வெளியீட்டு விழா தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு நூலை வெளியிட்டுப் பேசிய பிரதமர் மோடி, இந்திய ஜனநாயகத்தின் உண்மையான பலத்தையும் சாத்தியக்கூறுகளையும் வெளிப்படுத்தும் சிறந்த படைப்பு இதுவெனப் பாராட்டினார்.

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களின் ரீல்ஸ்கள் நம் வாழ்வை ஆதிக்கம் செய்கின்றன. இளைஞர்களைப் பல்வேறு திசைகளுக்கு இழுத்துச் செல்லும் இன்ஃப்ளுயன்சர்கள் குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் குறுக்கு வழிகள் ஒருபோதும் நிரந்தர வெற்றியைக் தராது; அவை உங்களை வீழ்த்திவிடும்.

இதையும் படிங்க: அவைக்கு வர மோடியும் அமித்ஷாவும் பயப்படுகிறார்கள்!  மல்லிகார்ஜுன கார்கே  குற்றச்சாட்டு!

வாழ்க்கையில் நீங்கள் முன்னேறிச் செல்ல விரும்பினால், உங்களுக்குப் பிடித்தமான சான்றோர்கள் மற்றும் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களைத் தேடிப் பிடித்து வாசியுங்கள். அவைதான் சரியான பாதையைக் காட்டும் தெளிவான வழிகாட்டிகளாகத் திகழும்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பொதுச் சேவையையே தனது வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுத்துத் தனது கடமைகளில் உறுதியோடு நின்று உழைத்தவர். நாடாளுமன்ற உறுப்பினர், ஆளுநர் மற்றும் இந்தியாவின் குடியரசுத் தலைவராக அவர் ஆற்றிய நற்பணிகளும், அர்ப்பணிப்பும், சேவை மனப்பான்மையும் ஒவ்வொரு இந்தியருக்கும் மிகப்பெரிய உத்வேகமளிப்பதாகும்.

பாரதத்தின் ஜனநாயக வலிமையை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ள ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில், இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் வாசிப்புப் பழக்கம் குறித்துப் பிரதமர் மோடி பேசிய வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றன.

இதையும் படிங்க: கால்நடை மருத்துவ படிப்பு நுழைவு தேர்வு ரத்து விவகாரம்..! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share