×
 

திணறடித்த கூட்ட நெரிசல்... மகிழ்ச்சி இழக்க வைத்த சோகம்... சித்தராமையா வேதனை!

கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ரசிகர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வேதனை தெரிவித்துள்ளார். துயரத்தால் ஏற்பட்ட சோகம் வெற்றி கொண்டாட்டத்தை மகிழ்ச்சி இழக்க செய்துவிட்டது என்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார். 

 கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் திரண்டதால் ஏற்பட்ட சோகம் என்றும் 35 ஆயிரம் பேர் அமரக்கூடிய மைதானத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்., இரண்டு முதல் மூன்று லட்சம் பேர் வரை மைதானத்தில் திரண்டதால் கூட்டம் நெரிசல் அதிகரித்தது என்றும் அவர் விளக்கமளித்தார்.

இதையும் படிங்க: கட்டுக்கடங்காத கூட்டம்... திணறும் பெங்களூரு... போலீசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க டி.கே.எஸ். வேண்டுகோள்!

இதையும் படிங்க: "ஈ சாலா கப் நம்தூ"... RCB அணியை கொண்டாடிய சித்தராமையா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share