×
 

சீனா பெயரை சொல்லி தப்பிக்கும் கப்பல்கள்! ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் தாக்குதலை சமாளிக்க புது ரூட்!

மேற்கு ஆசியாவில் கச்சா எண் ணெய் கப்பல்கள் வெளியேறும் ஒரே கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், அந்நாட்டின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, 'சீன உரிமையாளர் கப்பல், சீன குழுவினர் உள்ள கப்பல்' என்ற பெயரில் பல்வேறு சரக்கு கப்பல்கள் செல்கின்றன.

மேற்காசியாவில் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால், வளைகுடா பகுதியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட கப்பல்கள் சிக்கியுள்ளன. இவற்றில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெய் உள்ளிட்ட சரக்குகள் அடங்கும். உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் இந்த ஜலசந்தி வழியாகத்தான் செல்கிறது.

ஈரான், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களை தாக்கும் என்று எச்சரித்துள்ளது. ஆனால், சீனாவுக்கு ஆயுத உதவி செய்ததால், சீன உரிமையாளர் கொண்ட கப்பல்கள் மற்றும் சீன குழுவினர் உள்ள கப்பல்களை மட்டும் தாக்க மாட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது. இதைப் பயன்படுத்தி, பல நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் 'சீன உரிமையாளர் கப்பல்' என்று தங்களை அடையாளப்படுத்தி ஜலசந்தி வழியாக செல்ல முயற்சிக்கின்றன.

கப்பல் போக்குவரத்து தரவுகளை ஆய்வு செய்யும் தனியார் நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த வாரத்தில் 10-க்கும் மேற்பட்ட கப்பல்கள் தங்கள் ஆட்டோமேட்டிக் அடையாள சிக்னல்களை (AIS) மாற்றி 'சீன உரிமையாளர்', 'அனைத்து குழுவினரும் சீனர்கள்' என்று காட்டியுள்ளன.

இதையும் படிங்க: ஈரான் தாக்குதலில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு!! உயர்ந்தது பலி எண்ணிக்கை!!

சில கப்பல்கள் 'CHINA OWNER_ALL CREW' போன்ற தகவல்களை பயன்படுத்தி ஹார்முஸ் வழியாக சென்றுள்ளன. கொள்கலன் கப்பல்கள், எண்ணெய் டேங்கர்கள் உள்ளிட்டவை இந்த 'மாறுவேட' உத்தியை பயன்படுத்துகின்றன.

இதனால், சில கப்பல்கள் பாதுகாப்பாக சென்றாலும், பெரும்பாலானவை இன்னும் வளைகுடாவில் சிக்கியுள்ளன. உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வு, ஏற்றுமதி தாமதம் போன்ற பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சீனா ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி தன் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு கோரியுள்ளது. ஆனால், மற்ற நாடுகளின் கப்பல்கள் இந்த சூழலில் பெரும் அபாயத்தை எதிர்கொள்கின்றன.

இந்த சம்பவம் உலக எரிசக்தி பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாவிட்டால், உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகள் ஏற்படலாம். கப்பல் உரிமையாளர்கள் இப்போது 'சீன இணைப்பு' என்ற போர்வையை பயன்படுத்தி தப்பிக்க முயல்வது, போர் சூழலின் விசித்திரமான ஒரு அம்சமாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: சென்னை கச்சா எண்ணெய் வருவதில் சிக்கல்!! சிக்கித்தவிக்கும் கப்பல்! பெட்ரோல், டீசல் விலை உயரும்?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share