×
 

திடீர் ட்விஸ்ட்.. ராணுவத்துக்கு ஆதரவு அளிக்க பாகிஸ்தான் மக்கள் மறுப்பு.. மக்களை உசுப்பிவிடும் மதகுரு!!

இந்​தி​யா​வுக்கு எதி​ராக செயல்​படும் பாகிஸ்​தான் ராணுவத்​துக்கு ஆதரவு அளிக்க பொது​மக்​கள் மறுப்பு. இதனால் அங்கு உள்​நாட்டு கலகம் வெடிக்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

இந்​தி​யா​வுக்கு எதி​ராக செயல்​படும் பாகிஸ்​தான் ராணுவத்​துக்கு ஆதரவு அளிக்க பொது​மக்​கள் மறுப்பு. இதனால் அங்கு உள்​நாட்டு கலகம் வெடிக்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

பகல்ஹாம் தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் நில​வு​கிறது. இந்​நிலை​யில், பாகிஸ்​தானில் ஒரு வீடியோ சமூக வலை​தளங்​களில் மிக வேகமாகப் பகிரப்​பட்டு வரு​கிறது. அந்த வீடியோ​வில், இந்​தி​யா​வுட​னான போர் பதற்​றம் குறித்து பொது​மக்​களிடம் கருத்து கேட்​கப்​பட்டுள்ளது. அப்​போது இந்த விவ​காரத்​தில் ராணுவத்​தின் செயல்பாட்​டுக்கு ஆதரவு அளிக்க அவர்​கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இது அந்​நாட்டு ராணுவ தளபதி அசிம் முனிருக்கு பெரும் சிக்​கலை ஏற்​படுத்தி உள்​ளது.



பாகிஸ்தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள லால் மசூ​தி​யில் சமீபத்​தில் நடை​பெற்ற ஒரு மதப் பிரசங்​கத்​தில் மதகுரு மவுலானா அப்​துல் அஜீஸ் காசி பேசியுள்ளார். அதில், “இந்​தி​யா​வுடன் போர் தொடுக்க வேண்​டுமா என்​ப​தற்கு ஆதரவு தெரி​விப்​பவர்​கள் கையை உயர்த்துங்கள்” என கேட்​கிறார். ஆனால், ஒரு​வர் கூட கையை உயர்த்​த​வில்​லை.

இதையடுத்து  பாகிஸ்​தான் ராணுவம், ஆட்​சி​யாளர்​களுக்கு மவுலானா கடும் கண்​டனம் தெரிவித்தார். மேலும், “இந்​தி​யா​வைவிட பாகிஸ்​தான் அடக்​கு​முறையைக் கையாள்​கிறது. குறைந்​தபட்​சம் இந்​தியா ஒரு​போதும் லால் மசூதி அல்​லது வஜிரிஸ்​தான் மீது குண்டு வீச​வில்​லை” என்​றார். அதாவது, 2007-ம் ஆண்டு லால் மசூ​தியை முற்​றுகை​யிட்​டது, வஜிரிஸ்​தான் மீது பல முறை நடந்த விமானத் தாக்​குதல் உள்​ளிட்ட பாகிஸ்​தான் ராணுவத்​தின் உள்​நாட்டு அடக்​கு​முறையை அவர் மறை​முக​மாக குறிப்​பிட்​டார்.

தற்​போதைய ஆட்​சி​யில், பலூச், பஷ்துன் பிரிவு மக்​கள், இம்​ரான் கானின் பாகிஸ்​தான் தெஹ்ரீக்​-இ-இன்​சாப் கட்​சி​யினர் (பிடிஐ), மத குரு​மார்​கள், பத்​திரிகையாளர்​கள் காணா​மல் போன விவ​காரத்​தை​யும் அவர் நினை​வு​கூர்ந்​தார். “பஷ்துன் பிரிவு மக்​கள் மீது ராணுவம் அடக்​கு​முறையைக் கையாண்​டுள்​ளது. இந்​நிலை​யில், இந்​தியா பாகிஸ்​தானை தாக்​கி​னால் பஷ்துன்​களாகிய நாங்​கள் இந்​திய ராணுவத்​தின் பக்​கம் நிற்​போம்” என்​றும் மவுலானா கூறி​யுள்​ளார்.
.
இக்கருத்​துகள் பாகிஸ்தானில் நில​வும் அதிருப்​தியை பிர​திபலிக்​கின்​றன. குறிப்​பாக, பலூச் பஷ்துன் பிரி​வினரும் பிடிஐ கட்​சி​யினரும் ராணுவத்​துக்கு சவால் விடுத்​துள்​ளனர். இதனால் பாகிஸ்​தானில் உள்​நாட்டு கலகம் வெடிக்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தினர்.. முதல்வர் ஸ்டாலினை உசுப்பும் மத்தியமைச்சர் எல்.முருகன்!

இதையும் படிங்க: பாகிஸ்தான் தோற்று போன ஒரு நாடு.. பாக்.கை டாராக கிழித்து தொங்கவிட்ட ஓவைசி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share