டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு..!! ஸ்விஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ..!! 6 பயணிகள் காயம்..!!
விமானத்தின் ஒரு என்ஜினில் ஏற்பட்ட கோளாறே புகை வெளிப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சுமார் 1.08 மணியளவில், டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGI) பெரும் பதற்றம் ஏற்பட்டது. சுவிட்சர்லாந்தின் சூரிக் நகரத்திற்கு புறப்பட இருந்த ஸ்விஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (SWISS) நிறுவனத்தின் LX147 என்ற விமானம், ரன்வேயில் டேக்-ஆஃப் செய்யும் போது திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டு புகை மற்றும் தீப்பொறி வெளியேறியது. இந்த சம்பவத்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் தவிர்க்கப்பட்டது.
ஏர்பஸ் A330-343 (பதிவு எண் HB-JHK) வகை விமானத்தில் 228 பயணிகள், 4 குழந்தைகள் (இன்ஃபேண்ட்ஸ்) உட்பட மொத்தம் சுமார் 232 பயணிகளும், 13 ஊழியர்களும் இருந்தனர். விமானம் ரன்வே 28-ல் வேகம் எடுத்துக் கொண்டிருந்தபோது, இடது பக்க என்ஜினில் (நம்பர் ஒன் என்ஜின்) கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தின் இடது பக்க லேண்டிங் கியர் அருகே புகை வெளியேறியது.
வலது பக்க லேண்டிங் கியர் அருகிலும் தீப்பொறி தெரிந்தது. உடனடியாக விமானிகள் டேக்-ஆஃப்-ஐ நிறுத்தி (Rejected Takeoff) விமானத்தை நிறுத்தினர். விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக முழு அவசரநிலையை (Full Emergency) பிறப்பித்தனர். தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தின.
இதையும் படிங்க: "பாஜகவிடம் ஏமாந்துவிடாதீர்கள்!" - முதலமைச்சர் ஸ்டாலினுக்காக களம் இறங்கிய அரவிந்த் கெஜ்ரிவால்!
பயணிகளும் ஊழியர்களும் எமர்ஜென்சி ஸ்லைடுகள் மூலம் விமானத்திலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த அவசர வெளியேற்றத்தின்போது குறைந்தது 6 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் மெடான்டா மருத்துவமனைக்கு (குருகிராம்) அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு ஊழியருக்கு கால் முறிவு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்விஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “டெல்லியில் LX147 விமானத்தில் என்ஜின் தொடர்பான சிக்கல் ஏற்பட்டது. விமானிகள் டேக்-ஆஃப்-ஐ கைவிட்டு, பாதுகாப்பு காரணமாக வெளியேற்ற முடிவு செய்தனர். காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளது. மேலும், சம்பவம் குறித்து விசாரணைக்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தது.
டெல்லி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் உடனடியாக செயல்படுத்தப்பட்டன. பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமான நிலைய செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படவில்லை” என்று தெரிவித்தனர். ரன்வே 28 தற்காலிகமாக மூடப்பட்டு, விமானம் அகற்றப்படும் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் விமான பயணிகளிடையே சிறிது பீதியை ஏற்படுத்தினாலும், விமானிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களின் உடனடி நடவடிக்கையால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்ட நிலையில், தீ விரைவில் அணைக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் விமானப் பாதுகாப்பு தரநிலைகள் குறித்து மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது. விமானத்தின் பராமரிப்பு மற்றும் என்ஜின் சோதனை நடைமுறைகள் குறித்து விரிவான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!