போதாது... தீபத் திருவிழாவுக்கு கூடுதல் பாதுகாப்பு கேட்டு வழக்கு... டிஜிபி பதிலளிக்க ஆணை...!
திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு என்னென்ன ஏற்பாடுகள் குறித்து பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டின் ஆன்மிக மையமாகத் திகழும் திருவண்ணாமலை, ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஒரு அற்புதமான ஒளி விழாவை அணிவகுத்து நிற்கிறது. கார்த்திகை தீபம் என்று அழைக்கப்படும் இந்தத் திருவிழா, லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்னோடு இணைத்து, இருளைக் கடந்து ஒளியின் பெருமையைப் பாடுகிறது.
கார்த்திகை தீபத்தின் வரலாறு, புராணங்களின் ஆழமான கதைகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். தமிழ் பஞ்சாங்கத்தின்படி, கார்த்திகை மாத பௌர்ணமியன்று, கிருத்திகா நட்சத்திரத்துடன் இணைந்து நிகழும் இந்த விழா, பத்து நாட்கள் நீடிக்கும் பிரஹ்மோத்சவமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு தீபத் திருவிழா கொண்டாட்டமாக டிசம்பர் 3 அன்று, மாலை 6:30 மணியளவில், திருவண்ணாமலையின் உச்சியில் 30 அடி உயரமுள்ள பெரிய கும்பத்தில், 3000 கிலோ தீப எண்ணெய் மற்றும் 500 கிலோ பிளவுச் சாம்பல் கொண்டு மகா தீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை தீபத் திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் நெரிசல் ஏற்படாமல் தடுப்பது, சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்டவை குறித்து சரக டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி. உடன் விரிவான ஆய்வு ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: எந்த தப்பும் இல்லை! இயக்குனர் கஸ்தூரிராஜா விடுதலை சரியே..! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...!
இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் டிசம்பர் 3ம் தேதி நடக்க உள்ள திருக்கார்த்திகை திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக யானை ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தீபத் திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடு குறித்து நவம்பர் 24 ஆம் தேதிக்குள் பதில் தர டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்து உள்ளது.
இதையும் படிங்க: ரூ. 20 லட்சம் வரை வைப்புத் தொகை... ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைக்கான பரிந்துரை வெளியீடு...!