×
 

மேலும் தீவிரம் அடைந்தது வடகிழக்கு பருவமழை!! 23 மாவட்டத்தில் கனமழை அலர்ட்! - வானிலை அப்டேட்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை மையம் (ஆஐஎம்டி) அறிவித்துள்ளது. குமரி கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக அடுத்த சில நாட்களில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள் மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நேற்று தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கைப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று குமரி கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலைபெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மெதுவாக நகர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், நவம்பர் 22-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும். அது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்தபடி தீவிரமடைய வாய்ப்புள்ளது.

இதன் தாக்கமாக, இன்று திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதற்காக ஆரஞ்சு எச்சரிக்கை (ஹெவி டு வெரி ஹெவி ரெயின்) விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை (ஹெவி ரெயின்) விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒரே சமயத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு! தாங்குமா? தப்பிக்குமா தமிழகம்?! வெதர் அப்டேட்!

நாளை (நவம்பர் 19) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 20) கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும். நவம்பர் 21-ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நவம்பர் 22-ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நவம்பர் 23-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

நவம்பர் 24-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை பகுதியைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கும் இதே எச்சரிக்கை பொருந்தும்.

இன்று காலை வரை 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு அதிகபட்சமாக நாகையின் வேதாரண்ணியத்தில் 170 மி.மீ., திருநெல்வேலி ஊத்து பகுதியில் 140 மி.மீ., நாலுமுக்கு, கோடியக்கரையில் 130 மி.மீ., திருக்குவளை, காக்காச்சியில் 120 மி.மீ., நாகை, வேளாங்கண்ணியில் 110 மி.மீ. ஆகியவை பதிவாகியுள்ளன. இந்த மழைக்கு இலங்கைக்கு அருகில் உருவான சுழற்சி மண்டலமும் காரணமாக அமைந்துள்ளது.

இந்த வானிலை நிலவரத்தால், கடலோரப் பகுதிகளில் மற்றும் மிதமான காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தை பதம்பார்க்க தயாராகும் தீவிர புயல்! தாண்டவம் ஆடும் வடகிழக்கு பருவமழை! டெல்டா வெதர்மேன் அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share