கப்பல் கனவு கரைஞ்சது..! வலியுடன் வழி தேடுகிறேன்... மாணவி கொலையில் ஆதங்கத்தை கொட்டிய தமிழிசை..!!
பிளஸ் டூ மாணவி கொலை சம்பவத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கம் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்திற்கு சென்று வந்ததிலிருந்து மனது மிகவும் கனமாகவும் பல கேள்விகள் அலை மோதுவதுமாகவே இருக்கிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கம் தெரிவித்தார். மிக நன்றாக படிக்கும் ஒரு மாணவி பத்தாவது பரீட்சையில் பள்ளியில் இரண்டாவது இடத்தை பெற்ற மாணவி பிளஸ் டூவில் மிகச் சிறந்த மாணவியாக வரவேண்டும் என்று படித்துக் கொண்டிருந்த மாணவி இயற்கை உபாதை கழிப்பதற்கு சென்றவள் திரும்பி வரவே இல்லை என்றும் பரிதவித்த பெற்றோர்கள் காவல்துறையினரால் அலைகழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அரசாங்கமும் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படுவதாக தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கப்பலுக்கு வேலைக்குப் போக வேண்டும் என்ற கனவோடு கலைந்து போன ஒரு இளம் பெண்ணின் மரணத்திற்கு பதில் என்ன? குடும்பத்தின் துயரத்திற்கு பதில் என்ன? பல கேள்விகள் என் மனதில் எழுந்து கொண்டே இருக்கிறது என்றார்.
பெண்கள் பொது வழியில் இயற்கை உபாதைகளை கழிக்க செல்லாத ஒரு மரியாதையான நிலைமை இருக்க வேண்டும் என்று கிராமத்தில் கட்டப்பட்ட கழிவறை பூட்டு போட்டு பூட்டப்பட்டு இருக்கிறது என்று கூறிய அவர், பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டுமா கழிப்பறைகள் பாதுகாக்கப்பட வேண்டுமா? தூய்மை பாரத திட்டத்தின் மூலம் அனைவருக்கும் கழிப்பிட வசதி இருக்க வேண்டும் என்பதே பிரதமரின் கனவு என்றும் கூறினார்.
இதையும் படிங்க: சங்கீதாவுக்கு நடப்பது கொடுமை... நியாயம் கிடைக்கணும்..!! தமிழிசை ஆதரவு குரல்..!!
பெண்களின் அடிப்படை பரிதவிப்பையோ அவர்களின் அடிப்படை தேவையோ யாரும் சரியாக கண்டு கொள்வதில்லை என கருத்து தெரிவித்துள்ளார். உண்மையான பிரச்சினைகளை மறைத்துவிட்டு உணர்வுபூர்வமான பிரச்சனைகள் மட்டுமே தமிழக அரசியலில் மேலோங்கி அது அரசியல் லாபமாக மாறிக்கொண்டிருக்கிறது என்றும்
அரசியலைத் தாண்டி பெண்ணினத்தை பாதுகாக்க வேண்டிய கடமை இருக்கிறது என்றும் வலியுடனே வழியை தேடி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் எனவும் பெண்களின் கண்களில் வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரைத் துடைக்க அரசியலைத் தாண்டி பெண்ணினம் ஒன்றுபட வேண்டும் எனவும் சிந்தித்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் செட்டில்மெண்ட் மூலம் எப்போ ஊழலை சொல்ல போறீங்க? தமிழிசை சரமாரி கேள்வி..!!