உங்க வாயால அந்த வார்த்தையா? கொச்சைப்படுத்திடீங்க ஓபிஎஸ்..! தமிழிசை ஆதங்கம்..!!
திமுகவில் இணைந்துள்ள OPS குறித்து தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தமிழக அரசியலில் இன்று ஒரு முக்கியமான திருப்பம் நிகழ்ந்துள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான ஓ. பன்னீர்செல்வம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக திராவிட முன்னேற்ற கழகம் தோல்வியை சந்திக்கப் போகிறது என்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் OPS மீது எவ்வளவு மரியாதை இருந்தாலும், தனது வாயால் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொன்னது மட்டுமல்லாமல் தாய் கழகத்திற்கு வந்ததைப் போல உணர்கிறேன் என்று சொன்னது தாய்மையை கொச்சைப்படுத்துவதாக தான் எடுத்துக் கொள்வதாக கூறினார்.
ஜெயலலிதா தன் வாழ்நாள் முழுவதும் எந்த கட்சியை எதிர்த்தாரோ எந்த கட்சி ஒரு பெண் என்றும் பாராமல் அவரை சட்டமன்றத்தில் மிக மோசமாக நடத்தினார்கள் அந்த கட்சிக்கு சென்று தன்னை இணைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் தாய் கழகம் இணைந்ததைப் போல ஒரு உணர்கிறேன் என்று சொன்னால் அது தமிழகத்தில் உள்ள யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டு வாங்க..! தொடர் சிகிச்சையில் எச். ராஜா...! நேரில் சந்தித்து நலம் விசாரித்த தமிழிசை..!
இன்னும் சொல்லப்போனால் திமுக எந்த அளவில் தோல்வி பயத்தில் இருக்கிறது என்றால் இவர்களைப் போன்றவர்களை சேர்த்துக்கொண்டு அவர்கள் தான் திமுகவிற்கு மிகப்பெரிய பலம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார் என்றால் திமுகவின் பரிதாப நிலையை தான் எண்ண வேண்டி இருக்கிறது என்றார். திமுகவில் OPS சேர்க்கை திமுக வெற்றிக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கமல் பேசுனது ஸ்டாலினுக்கே ஷாக் ஆகி இருக்கும்... அவர அனுப்புனதே பெரிய தப்பு..! நக்கலடித்த தமிழிசை..!