×
 

இன்ஸ்டா காதலால் நின்ற தாயின் மூச்சு... காதலனுடன் சேர்த்து அம்மாவையே தீர்த்துக்கட்டிய 10ம் வகுப்பு மாணவி...!

காதல் விவகாரம் பற்றி அறிந்து தாய் கண்டித்ததால் கோபமடைந்த 10 வகுப்பு படிக்கும் மகள், தனது காதலன் மற்றும் அவரது தம்பியுடன் சேர்ந்து தனது தாயைக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஜீடிமெட்லாவில் உள்ள என்.எல்.பி நகரைச் சேர்ந்தவர் அஞ்சலி கணவர் பிரிந்த நிலையில் தெலுங்கானா கலாச்சார பிரிவில்  நாட்டுப்புற பாடகியான இவர்,  தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். மூத்த மகள் தேஜஸ்ரீ ( 16 ) மைனர் சிறுமி 10 வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தேஜஸ்ரீ  8 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் நல்கொண்டாவைச் சேர்ந்த பகில்லா சிவா (19) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு  அந்த அறிமுகம் இறுதியில் காதலாக மாறியது. 

டி.ஜே பிளேயரான சிவாவும், தேஜஸ்ரீயும் அவ்வப்போது போன் செய்து  பேசி வந்தனர்.   இவர்களின் காதல் விவகாரம் பற்றி அஞ்சலிக்கு தெரியவந்தது. இதனால் தேஜஸ்ரீயிடம் இந்த வயதில் இது சரியானது அல்ல நன்றாகப் படிக்க வேண்டும் என்று மகளை கண்டித்தாள். இந்த நிலையில் தேஜஸ்ரீ கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு  வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு சிவா உடன் சென்றார். இதனை அறிய அறிந்த அஞ்சலி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதனை அடுத்து போலீசார் தேஜஸ்ரீயை  வீட்டிற்கு அழைத்து வந்தனர். சிவா மூலம் தேஜஸ்ரீயை பாலியியல் ரீதியாக தொடர்பு கொண்டாரா என்பதை அறிய இன்று மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.

இதையும் படிங்க: #BREAKING: மேலும் ஒரு பாமக பிரமுகர் வெட்டிக்கொலை... சரமாரியாக குத்திவிட்டு தப்பிய மர்ம கும்பல்

இந்த நிலையில் தங்கள் காதலுக்கு தடையாக இருந்த தனது தாயைக் கொல்ல தேஜஸ்ரீ முடிவு செய்தாள். இதை  தன் காதலன் சிவாவிடம் சொன்னாள் இருவரும் கொலைக்கான திட்டம் திட்டினர். அதன்படி சிவா தனது தம்பி பகில்லா யஷ்வந்த்  (18) கூட்டாக சேர்த்து இன்று காலை  அஞ்சலி வீட்டிற்கு சென்றனர். பின்னர் தேஜாஸ்ரீயுடன் சேர்ந்து  மூவரும் அஞ்சலியை முதலில் துப்பட்டா கொண்டு கழுத்தை நெரித்தனர். இதில் அஞ்சலிக்கு முச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார். ஆனால் கை, கால்களில் அசைவு இருந்ததால் மசாலா அரைக்கும் சிறிய உரல் கொண்டு அடித்து அஞ்சலியை கொடூரமாக கொலை செய்தனர்.

சத்தம் கேட்டு வீட்டில் இருந்த தேஜஸ்ரீ தங்கை வந்தபோது எதுவும் இல்லை என்று கூறி அறைக்குள் அனுப்பி பூட்டினர். அதற்குள் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்து  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஜீடிமெட்லா போலீசார் அங்கு சென்று மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: #BREAKING: அருப்புக்கோட்டை அருகே பயங்கரம்... மனைவி, 2 பெண் குழந்தைகள் வெட்டிக்கொலை... ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலங்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share