தாய்லாந்து வகுப்பறையில் கேட்ட துப்பாக்கிச்சத்தம்! 3 ஆசிரியர்கள், 3 மாணவர்கள் பலி! 15 பேர் காயம்!
தாய்லாந்து பள்ளியில் மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 ஆசிரியர்கள், 3 மாணவர்கள் என மொத்தம் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தாய்லாந்தில் பள்ளி ஒன்றில் மாணவன் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாங்காக்கிற்கு வடமேற்கே உள்ள நொந்தபுரி மாகாணத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில் 3 ஆசிரியர்கள் மற்றும் 3 மாணவர்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நொந்தபுரி மாகாணத்தில் உள்ள டெப்சிரின் நொந்தபுரி பள்ளியில் வெள்ளிக்கிழமை இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. பள்ளிக்குள் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் திடீரென துப்பாக்கிச்சத்தம் கேட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
துப்பாக்கிச்சூட்டில் 3 ஆசிரியர்களும் 3 மாணவர்களும் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் சிலர் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ஈரான் மக்களை கொல்ல விரும்பவில்லை! போர் ரத்து... ஒப்பந்தம் ஓகே? டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் மாணவன் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்த துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். தாக்குதலுக்கான பின்னணி, ஆயுதம் எவ்வாறு மாணவனிடம் கிடைத்தது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவம் குறித்து தாய்லாந்து பிரதமர் அனுடின் சர்ன்விராகுல் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாய்லாந்தில் பள்ளி வளாகங்களைச் சுற்றியுள்ள பாதுகாப்பு மற்றும் இளைஞர்களிடம் துப்பாக்கிகள் சென்று சேர்வது தொடர்பான விவாதங்களை இந்த சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது. கடந்த காலங்களிலும் அந்நாட்டில் பள்ளிகளைச் சுற்றி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போதைய சம்பவம் பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலின் முழுமையான பின்னணி மற்றும் மாணவனின் நோக்கம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மட்டுமே சம்பவத்திற்கான காரணம் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகும்.
இதையும் படிங்க: 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொதுவெளியில் தோன்றும் ஷேக் ஹசீனா! வங்கதேச அரசியலில் மீண்டும் பரபரப்பு!